Monday, January 31, 2011

SYMBOLS

புதுச்சேரி முன்னாள் முதல்வருடன் அ.தி.மு.க., நிர்வாகிகள் சந்திப்பு


புதுச்சேரி : "புதுச்சேரியில், ஊழலற்ற ஆட்சி அமைய அ.தி.மு.க., பாடுபடும். தேர்தல் கூட்டணி குறித்து தோழமை கட்சிகளுடன் ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது' என, தம்பிதுரை எம்.பி., கூறினார். அ.தி.மு.க., தேர்தல் பொறுப்பாளர்களான கொள்கை பரப்புச் செயலர் தம்பிதுரை எம்.பி., அமைப்பு செயலர் செம்மலை எம்.பி., இருவரும் நேற்று காலை, புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பு, 15 நிமிடங்கள் நீடித்தது. பின், மாநில அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் தோழமை கட்சிகளான இ.கம்யூ., மற்றும் மா.கம்யூ., நிர்வாகிகளுடன் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினர்.



இதையடுத்து, தம்பிதுரை, செம்மலை இருவரும், நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தி.மு.க., ஆதரவுடன் நடக்கும் மக்கள் விரோத காங்., ஆட்சியில், நலத் திட்டங்கள் சரிவர செயல்படுத்தப்படவில்லை. புதிய அரசு அமைக்க மக்கள் விரும்புகின்றனர்.

இதை நிறைவேற்றும் வகையில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி, புதுச்சேரியில், 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, நிலையான ஆட்சி அமையும். முதல்கட்டமாக, தோழமைக் கட்சிகளான இ.கம்யூ., மற்றும் மா.கம்யூ., நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். இது, ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை தான். கட்சியின் மேலிட உத்தரவுப்படி மரியாதை நிமித்தமாக முன்னாள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்துப் பேசினோம். கூட்டணி கட்சிகள் குறித்து கட்சித் தலைமை தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி, அ.தி.மு.க., அணியில் கூட்டணி கட்சிகளுடன் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை துவங்கி உள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

மக்களுக்கு உழைக்கும் கட்சிக்கே ஓட்டுப் போட வேண்டும்: விஜயகாந்த்


சென்னை: ""சுட்டுப்போட்டாலும் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஓட்டுப்போடக்கூடாது. நாடு முன்னேறவும், மக்கள் வாழ்வு வளம் பெறவும் உழைக்கும் தகுதியுள்ள கட்சிக்கே ஓட்டளிக்க வேண்டும்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 1,000 பேர், பல கட்சிகளில் இருந்து விலகி தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் நேற்று இணைந்தனர். கோயம்பேடு தே.மு.தி.க., அலுவலகத்தில் நடந்த இவ்விழாவில் மாநில நிர்வாகிகள் சுதீஷ், பார்த்தசாரதி, விழுப்புரம் மாவட்ட செயலர் வெங்கடேசன் பங்கேற்றனர்.

புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று விஜயகாந்த் பேசியதாவது:முதியோர் உதவித்தொகை பெற, 2009ம் ஆண்டு தேர்தெடுக்கப்பட்டோருக்கு இதுவரை பணம் வழங்கவில்லை. தேர்தலையொட்டி, ஏப்ரல் மாதத்தில் அந்த பணத்தை வழங்க திட்டமிட்டுள்ளனர். காவேரி - கங்கை நதிநீர் இணைப்புக்கோ, முல்லை பெரியாறு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர், பாலாறு பிரச்னைக்கோ, விலைவாசியை குறைக்கவோ, கச்சத்தீவை மீட்கவோ முதல்வர் கருணாநிதி டில்லி செல்லவில்லை. மூன்று நாட்கள் தங்கி, தொகுதி பங்கீடு செய்வதற்கே சென்றுள்ளார். மக்கள் பிரச்னைக்கு முன்னுரிமை கொடுக்காத இதுபோன்ற அரசியல்வாதிகளை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருக்கிறோம்.

நல்லநேரம் பார்ப்பது, சாமி கும்பிடுவது மூடநம்பிக்கை என பகுத்தறிவு பேசிய முதல்வர் கருணாநிதி, தனது மகனுக்கு 60வது திருமணம் நடத்துகிறார். அவரும், மாலையும், குங்குமப் பொட்டும் வைத்து "போஸ்' கொடுக்கிறார். ஜென்ம நட்சத்திரமும், நவமியும் சேர்த்துவந்ததால், முன்கூட்டியே இதற்காக பூஜை நடத்தியுள்ளனர்.இதையெல்லாம் சொன்னால், விஜயகாந்த் அறிவுக்கெட்டவன்; முட்டாள் என்கின்றனர். குடித்து விட்டு பேசுவதாக கூறுகின்றனர். குடித்துவிட்டு உளறுபவன், கணக்கு வழக்குகளை ஒழுங்காக சொல்வானா. எல்லா ஜாதியிலும் ஏழைகள் உள்ளனர். அவர்கள் அனைத்து வசதிகளும் பெற்று சிரித்து வாழவேண்டும் என்பது என் எண்ணம்.

நீதிபதிகள் இப்போதுதான் கண்விழித்துள்ளனர். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்த தவறுகளை சுப்ரீம்கோர்ட் நீதிபதி கங்குலி, வெளிக்கொண்டுவரவேண்டும் என அவரது காலைப் பிடித்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். அரசு சார்பில் வழங்கப்படும் இலவசங்களை பிப்ரவரி மாதத்திற்கு பிறகு வினியோகிக்க அனுமதிக்கக் கூடாது என, தேர்தல் கமிஷனரையும் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். தொலைத்தொடர்பு ஒதுக்கீடு முறையை மாற்றப்போவதாக அமைச்சர் கபில் சிபல் கூறுகிறார். முன்பு தப்பு செய்தவர் யார் என்பதை மறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கின்றனர். கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரமுடியாது என அமைச்சர் பிரணாபும், அதை வெளிக்கொண்டு வரவேண்டும் என ராகுலும் கூறுகின்றனர். ஒரே கட்சியை சேர்ந்தவர்களுக்குள் முரண்பாடு இருக்கிறது.

தி.மு.க.,வை ஆட்சிக்கு வரவிடமாட்டேன் என்ற இளங்கோவன், இப்போது சீட் அதிகம் கேட்பது எங்கள் கடமை, அதை கொடுப்பது அவர்கள் உரிமை என்கிறார். காங்கிரசை பற்றி பேசினால், வருமான வரித்துறையை வைத்து ரெய்டு நடத்துவார்கள். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. சுட்டுப்போட்டாலும், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஓட்டுப் போடக்கூடாது. அவர்கள் கொடுக்கும் பணத்தை மக்கள் தயங்காமல் வாங்கிக்கொள்ளவேண்டும். நாடு முன்னேறவும், மக்கள் வாழ்வு வளம் பெறவும் உழைக்கும் தகுதியுள்ள கட்சிக்கே ஓட்டளிக்க வேண்டும். ஆயிரம் பொய் சொல்லியாவது நல்ல அரசு அமைக்க மக்கள் ஒத்துழைக்கவேண்டும்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார். ஆனால், தேர்தல் கூட்டணி பற்றி அவர் பேசவில்லை.

அசர வைக்கும் அ.தி.மு.க., தேர்தல் வியூகம்: திசை மாறும் தேர்தல் களம்



சட்டசபைத் தேர்தலுக்கான இட பங்கீட்டு தொடர்பான தேர்தல் வியூகத்தை மற்ற அரசியல் கட்சிகளை அசர வைக்கும் நிலையில் அ.தி.மு.க., வகுத்துள்ளது. இதனால், கூட்டணி அமைவதற்கான இறுதி கட்டத்தில், தேர்தல் களம் திசை மாறும் என கருதப்படுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, அனைத்து கட்சிகளும் தங்களது தகுதிக்கேற்ப பல்வேறு வியூகங்களை வகுத்து வெற்றிக்கு திட்டமிட்டு வருகின்றன. தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.அ.தி.மு.க., அணியில் தற்போது உள்ள கட்சிகளுடன், நடிகர் கார்த்திக்கின், "அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி' இணைந்துள்ளது. மேலும், சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.கூட்டணிக்கு தலைமையேற்கவுள்ள தி.மு.க.,- அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும், தங்களுக்கு தனி மெஜாரிட்டி பெற, குறைந்தது 140 இடங்களுக்கு குறையாமல் போட்டியிட வேண்டியிருக்கும். மீதமுள்ள 94 இடங்களையே கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் தகுதிக்கு ஏற்ப பிரித்துக் கொடுக்க வேண்டிய நிலையில் இவ்விரு கட்சிகளும் உள்ளன. முழு மெஜாரிட்டி பெறாவிட்டால், ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் தயவை நாட வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏற்படும்.

இப்போதைய தமிழக அரசு மைனாரிட்டியாக இருந்தாலும், கூட்டணி அமைச்சரவை அமைக்காமலேயே, ஐந்து ஆண்டுகளை முதல்வர் தன் தனிப்பட்ட திறமையால் முழுமையாக பூர்த்தி செய்து விட்டார். எதிர் காலத்திலும் இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்க முடியாது. அதனால், தேர்தல் கூட்டணி அமைக்கும் போதே எந்தெந்த கட்சிகள் தாங்கள் இழுத்த இழுப்புக்கு வரும் என்பதை பார்த்து பார்த்து கூட்டணி அமைக்க வேண்டிய நிலை உள்ளது.

தலைவர்களைப் பொறுத்தவரையில் முதல்வர் கருணாநிதி, இதர கட்சித் தலைவர்களை அரவணைத்துச் செல்லக் கூடியவர்; விட்டுக் கொடுத்து செயல்படக் கூடியவர். அவர் தன்னுடன் எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும், அந்த கட்சித் தலைவர்களை எளிதில் வசமாக்கி விடுவார். அதனால், அவர் எத்தகைய கூட்டணிக்கும் தயாராக உள்ளார்.அந்த கட்சி கூட்டணியில் சேர பா.ம.க.,வைத் தவிர புதிய கட்சிகள் ஏதும் தயராக இல்லை. பா.ம.க., கூட அவ்வப்போது அ.தி.மு.க.,வில் கூடுதல் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டா என்ற நப்பாசையுடன் தி.மு.க., கூட்டணிக்கு முழுமையாக சம்மதம் தெரிவிக்காமல் உள்ளது.

இதற்கு சாட்சி கூறுவது போல், கடந்த சில தினங்களுக்கு முன் அறிவாலயத்தில் பேட்டியளித்த முதல்வர் கருணாநிதி, பா.ம.க.,வுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது, "அவர்களும் சில சமிக்ஞைகளை அனுப்பியுள்ளனர். நாங்களும் சில சமிக்ஞைகளை கொடுத்துள்ளோம்' என்றார்.அதனால், தி.மு.க., கூட்டணியில் தான் பா.ம.க., என அனைவரும் நினைத்திருந்தனர். அதை அடுத்த சில தினங்களிலேயே பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மறுத்து விட்டார். இதில் யார் சொன்னது பொய் என்பது தெரியாத நிலை இதுவரை நீடிக்கிறது.

அ.தி.மு.க.,வின் நிலையோ வேறாக உள்ளது. அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க சிறிய கட்சிகள் முயன்று வருகின்றன. அதேசமயம் கருணாநிதியைப் போல், ஜெயலலிதா கூட்டணித் தலைவர்களுக்கு வளைந்து கொடுத்து செயல்பட மாட்டார். அதனால், அ.தி.மு.க.,வுடன் அதன் கூட்டணி கட்சிகள், தேர்தலுக்கு பின் இணைந்து செயல்பட தயங்கும். இதை மனதில் வைத்தே ஜெயலலிதா, தன் கூட்டணியில் அதிகளவில் உதிரி கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவைகளை இணைத்து வருகிறார். இந்த சிறிய கட்சிகளை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்தால், ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கை பற்றாக்குறை வந்தால் சரி செய்து கொள்ள முடியும் என்று அ.தி.மு.க., கருதுகிறது.

அ.தி.மு.க., சின்னத்தில் போட்டியிடும் சிறிய கட்சிகள், தேர்தல் முடிவுக்குப் பிறகு அ.தி.மு.க.,வை மிரட்ட முடியாது. அப்படியே மிரட்டினாலும், அதன் எம்.எல்.ஏ.,க்களை எளிதில் வளைத்து விடலாம். இதுவே அ.தி.மு.க.,வின் கணக்காக உள்ளது.அதற்கு ஏற்பவே அதன் கூட்டணி வியூகத்தை அ.தி.மு.க., வகுத்து வருகிறது. அதனால், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறும் எந்த கட்சியும் 45 இடங்களுக்கு மேல் பெற வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

முரண்டு பிடித்தால் மூன்றாவது அணிதான் : தென் மாவட்டங்களில் கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக, புதிய தமிழகம், சேதுராமன் தலைமையிலான மூ.மு.க., கார்த்திக் கட்சி ஆகியவற்றை தன் கூட்டணியில் ஜெயலலிதா சேர்த்துள்ளார். கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே அ.தி.மு.க., பலமாக உள்ளது. இந்நிலையில், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் தி.மு.க.,வுடன் நடந்துவரும் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு அ.தி.மு.க., பக்கம் வந்தால், மொத்த தொகுதிகளையும் அள்ளிவிடலாம் என அ.தி.மு.க., கணக்கு போடுகிறது. சென்னை உள்ளிட்ட நகரப்பகுதிகளில் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை நிலவுதால், அங்கும் அ.தி.மு.க., பலமாக உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கம்யூனிஸ்டுகள் துணையோடு அதிக தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்ற முடியும். இந்நிலையில், மீதமுள்ள வடமாவட்டங்களில் வெற்றி பெற பா.ம.க.,வின் துணை கிடைத்தால் போதுமானது. பா.ம.க.,விற்கு அதிக பட்சம் 35 இடங்களை ஒதுக்கினால் வெற்றி எளிதாகி விடும் என்ற யோசனையும் அ.தி.மு.க.,விடம் உள்ளது.இந்த அரசியல் சூழலை புரிந்து கொள்ளாமல், அ.தி.மு.க., கூட்டணியில் சேர்வதற்கு நிபந்தனைகளை விதித்து, தே.மு.தி.க., தொடர்ந்து முரண்டு பிடிக்குமானால், அது மூன்றாவது அணி உருவாக காரணமாய் அமைந்துவிடும்.

நமது சிறப்பு நிருபர்

யார் யார்?

தி.மு.க., அணியில் பா.ம.க., தேர்தலில் போட்டி : "சீட்' முடிவு செய்வதில் கட்சிகள் அதிக சுறுசுறுப்பு


சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை துவங்கிவிட்டன. தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெறுகின்றன என, டில்லியில் முதல்வர் நேற்று அறிவித்துள்ளார்.

காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தையை, காங்., தலைவர் சோனியாவிடம் இன்று முதல்வர் கருணாநிதி நடத்துகிறார். அ.தி.மு.க.,வுடன் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளன.மே மாதம் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க, அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தீவிரமாக நடத்தி வருகின்றன. தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

"பா.ம.க.,வும் தி.மு.க., கூட்டணியில் இடம் பெறும்' என, டில்லியில் முதல்வர் கருணாநிதி நேற்று அதிரடியாக அறிவித்தார். இன்று மதியம் 12 மணிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்கிறார். காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தையை நடத்துகிறார்.

முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க டில்லிக்கு நேற்று வந்த முதல்வர் கருணாநிதி நிருபர்களிடம் கூறும் போது, ""தலைநகரில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் போது சோனியா, பிரதமரை சந்திப்பேன். சோனியாவை சந்திக்கும் போது, வரும் சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறேன். இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சொல்ல முடியாது. தி.மு.க., கூட்டணியில் காங்கிரசைத் தவிர விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளும் இடம் பெறும்,'' என்றார்.

அ.தி.மு.க., அணியிலும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. அ.தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியும் இடம் பெற்றுள்ளன.தே.மு.தி.க., தமிழ்நாடு யாதவர் மகா சபை, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளுடனும் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறுவதற்குரிய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் குழுவினரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. ம.தி.மு.க., பொதுக்குழு வரும் 17ம் தேதி சென்னையில் கூடுகிறது. அக்கூட்டம் முடிந்த பின், அ.தி.மு.க.,விடம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை அக்கட்சி நடத்தும்.

இன்னும் 10 நாட்களுக்குள் தனது முடிவை அறிவிப்பதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதேபோல், தே.மு.தி.க.,வும் தனது இறுதி முடிவை அறிவித்ததும், கூட்டணிக் கட்சிகளுக்கான உடன்பாட்டில் இறுதி முடிவு எட்டி விடும்.பிப்ரவரி இரண்டாவது வாரத்திற்குள் எந்தெந்த அணியில் யார் யார்? இடம் பெறுவர் என்பதும், யார், யாருக்கு எத்தனை தொகுதிகள் என்ற முடிவும் தெரிந்து விடும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டசபைத் தேர்தலுக்கான சுறுசுறுப்பு, கட்சிகளிடம் அதிகரித்து பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

-நமது சிறப்பு நிருபர்

Sunday, January 30, 2011

Tamilnadu Election 2011

Tamilnadu Election 2011













The southern state of Tamil Nadu always sees a challenging scenario in the assembly elections. Take any previous Tamilnadu election for example and see its history for better understanding. Now Tamilnadu elections 2011 election is approaching hence the state is about to see the same drama due to the political rivalries of the regional parties. The equation of the Tamil Nadu election 2011 is unexpected now and none can reach at the conclusion now due to one factor or the other.

It is for the last few decades that Tamilnadu election sees political war between two major state level regional players supported by the national parties. In fact Tamilnadu elections 2011 too expect the same scenario. As political awareness has been much vibrant over the last few decades Tamil Nadu election 2011 seems to have different impact. Once all aspects are evaluated and Tamilnadu election is judged critically different facets of this political rivalry is understood better.

The big fight is expected to be seen in the Tamilnadu elections 2011 that would once again have two major rivalries alongside allies. Unique political game plan is to be seen in couple of months once the dates of Tamil Nadu election 2011 is declared and the state readies itself for the political big fight. This factor would be better understood once Tamilnadu election dates come and the phases are brought into the notice of people.

Blame gaming seems to be a common phenomenon in the forthcoming Tamilnadu election as well. The masses are ready to watch that when Tamil Nadu election 2011 is conducted. The major concentration of Tamilnadu elections 2011 would be on the power hunting by the ruling parties and the opposition one that might want power in hand by hook or by crook.

A differentiated phenomenon is definitely expected from Tamil Nadu election 2011 as the parties in political fight are those that remain daredevil and don't really want the "other" to get hold of any steps taken. It is going to make a big difference in the Tamilnadu elections 2011 because lots of break and adding in the party folds are already expected for political calculations.

print