Saturday, April 30, 2011

கருணாநிதி குடும்பத்தினர் அனைவர் பெயரையும் குற்றப்பத்திரிகையில் சேர்க்க வேண்டும்: ஜெயலலிதா

சென்னை: 2ஜி ஊழலில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால், அதில் தொடர்புடைய கருணாநிதி குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் சிபிஐயின் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.
Jayalalitha


கொடநாட்டில் தோழி சசிகலாவுடன் ஓய்வெடுத்து வரும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை முன்னின்று விசாரித்து வரும் சிபிஐயின் இரண்டாவது குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ள தனது மகள் கனிமொழியை காக்கும் வகையில், தனக்கே உரிய பாணியில் குழப்பமூட்டும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி.

இந்த ஊழலையே மறுத்துள்ளதோடு மட்டுமல்லாமல், இந்த ஊழல் இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் கற்பனையில் உருவான கட்டுக் கதை என்றும் குறை கூறியிருக்கிறார் கருணாநிதி. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணை நடவடிக்கைகளை, திராவிட அரசியலுக்கு எதிரான மேலாதிக்க சக்திகளின் சதி என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதியின் மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மோசமான செயல்பாட்டினை வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்களை கடுமையாக சாடியிருக்கிறார் கருணாநிதி.

தப்ப முடியாதபடி கடினமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் தருணத்தில், அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, மற்றவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது கருணாநிதியின் வாடிக்கை!.

குறிப்பிட்ட எந்தப் பெயரும் சுட்டிக் காட்டப்படவில்லை. தனி மனிதர், தனிப்பட்ட கட்சி அல்லது அமைப்பின் பெயர்கள் குறி வைக்கப்படவில்லை. வெறும் பொதுவான தூற்றுதல் தான்.

ஆனால், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது மிகப் பெரிய ஊழல். கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த ஊழலில் முழுவதுமாக மூழ்கி இருப்பதால், இந்த ஊழலில் இருந்து ஒதுங்கி இருப்பது என்பது கருணாநிதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இயலாத காரியம் ஆகும்.

இந்த ஊழலில் அடங்கியுள்ள அப்பட்டமான உண்மைகளில் சிலவற்றை நாம் காண்போம்.

1. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய முதல் செய்திகள் மற்றும் இந்த ஊழலில் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய தளபதி ஆ. ராசாவிற்கு உள்ள பங்கு பற்றிய தகவல்கள் ஆகியவை எந்த எதிர் தரப்பு ஊடகங்களிலும் முதன் முதலாக வரவில்லை. மாறாக, கருணாநிதியின் பேரன்களுக்கு சொந்தமான தொலைக்காட்சியான சன் டி.வியில் தான் முதன் முதலில் ஒளிபரப்பப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கருணாநிதியின் பேரன்களில் ஒருவர், 28.4.2011 அன்று நடைபெற்ற திமுகவின் “உயர் மட்டக் குழு” கூட்டத்தில் ஊடகங்களை பொதுவாக கருணாநிதி தாக்கிய சமயத்தில் உடனிருந்தார் என்பது தான்.

2. ராசா மற்றும் இதர நபர்களுக்கு எதிரான வழக்குகள் எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிபிஐயினால் தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவரால் இந்திய நாடாளுமன்றத்தில் தகுந்த ஆவணங்களுடனும், வலுவான வாதங்களுடனும் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

3. அரசியல்ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன், திமுகவிற்கு எதிரான கட்சி, ஆட்சி புரியும் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மத்திய புலனாய்வு துறை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை தாக்கல் செய்யவில்லை. மாறாக, கருணாநிதி தலைமையிலான தி.மு.க. முக்கிய பங்காற்றுகின்ற, கருணாநிதியின் மகனும், பேரனும் மத்திய அமைச்சர்களாக அங்கம் வகிக்கின்ற மத்திய அரசின் அறிவுரையின் பேரில் தான் சிபிஐ இந்த வழக்கினை தாக்கல் செய்திருக்கிறது.

4. ஒரு வருடத்திற்கும் மேலாக தூங்கிக் கொண்டிருந்த இந்த ஊழல் வழக்கு தீங்கிழைக்கும் கும்பல் கூரை மேல் ஏறி நின்று கூக்குரலிட்டதன் காரணமாக முக்கியத்துவம் பெறவில்லை; உலகின் மிகப் பெரிய ஊழலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில், மத்திய புலனாய்வுத் துறையால் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த விசாரணையை உச்ச நீதிமன்றமே முடுக்கி விட்டதன் காரணமாகத் தான் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றது.

5. இந்த வழக்கில், சி.பி.ஐ. இதுவரை இரண்டு குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. இன்னும் நிறைய குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்ய இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளது. இவையெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவோ, செவி வழிச் செய்தி அல்லது நாகரிகமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலோ நடைபெறவில்லை. மாறாக 80,000 பக்கங்கள் கொண்ட வலுவான ஆதாரங்களின், ஆவணங்களின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

6. இந்த வழக்கில் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டவர்கள் ஆ. ராசா மற்றும் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் சிலர் மட்டுமல்ல. இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் செல்வாக்கு படைத்த தொழில் குழுமத்தைச் சேர்ந்த மேலாண்மை இயக்குநர்களும், தலைமை செயல் இயக்குநர்களும் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள்.

உண்மை நிலை இவ்வாறு இருக்கையில், இந்த ஊழலை மூடி மறைக்கும் விதமாக, “செல்வாக்கு படைத்த ஒரு குழுவினரின் அரசியல் சதுரங்க விளையாட்டு இது” என்று அபத்தமாக குற்றம் சுமத்துகிறார் கருணாநிதி!.

நான் இப்பொழுது ஒரு சில கேள்விகளை கருணாநிதியிடம் கேட்க விரும்புகிறேன். கருணாநிதி அனுமதி அளித்திருந்தால், வாய்ப்பு கொடுத்திருந்தால், இந்தக் கேள்விகளை ஊடகங்களே அவரிடம் கேட்டிருக்கும் என்றும் நான் நம்புகிறேன்.

1. கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களின்படி, கலைஞர் டி.வி. நிறுவனத்தில் தயாளு அம்மாளுக்கு 60 விழுக்காடு பங்குகள் உள்ளன என்பது தெரிகிறது. இந்த அளவு பங்கினை வைத்துக் கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்த விவரங்கள் என்ன? இந்த டி.வியில் எவ்வளவு பணத்தை தயாளு அம்மாள் முதலீடு செய்தார்?. இந்த டி.வி. சேனலில் இந்த அளவிற்கு முதலீடு செய்யும் அளவுக்கு தயாளு அம்மாளுக்கு நிதி எங்கிருந்து கிடைத்தது?.

2. தனிப்பட்ட முறையில் தயாளு அம்மாள் இதில் பங்குதாரராக இருக்கிறாரா?, அல்லது கருணாநிதி குடும்பத்தின் தன்னுடைய கிளையின் பிரதிநிதியாக செயல்படுகிறாரா?.

3. 20 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி இந்த டி.வியில் எவ்வளவு முதலீடு செய்தார்?, இந்த அளவுக்கு முதலீடு செய்வதற்கு கனிமொழிக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது?, தனிப்பட்ட முறையில் கனிமொழி இதில் பங்குதாரராக இருக்கிறாரா?, அல்லது கருணாநிதி குடும்பத்தின் இரண்டாவது கிளையின் பிரதிநிதியாக செயல்படுகிறாரா?.

4. கலைஞர் டி.வியில் இயக்குநராக இருக்க மத்திய உள்துறை அமைச்சரகம் அனுமதி தராததையடுத்தே, கனிமொழியால் அதில் இயக்குநராக நீடிக்க முடியவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனியார் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பதற்கு எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், தொலைத் தொடர்பு நிறுவனத்துடன் கனிமொழி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதற்கான காரணங்கள் என்ன?.

5. சர்ச்சைக்குரிய 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் பயனாளியான டி.பி. ரியால்டி குழுமத்திடம் இருந்து கலைஞர் டி.வி. 214 கோடி ரூபாயை பெற்றிருக்கிறது. இந்தப் பணப் பரிமாற்றம் ஒரு தடவை நடைபெறவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பல முறை நடைபெற்று இருக்கிறது. இந்தப் பணம் ஏன் வாங்கப்பட்டது?. ராசாவால் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணாக 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதற்கு பிரதிபலனாகத் தான் இந்தப் பணம் கலைஞர் டி.விக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இல்லையெனில், சமீபத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வியில் இவ்வளவு பெரிய தொகையை மும்பையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஏன் முதலீடு செய்தது?.

6. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிபிஐ வழக்கு பதிவு செய்தவுடன், ராசாவை சிபிஐ விசாரிக்கத் தொடங்கியவுடன், டி.பி. ரியால்டிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை 'உத்திரவாதமற்ற கடனாக' மாற்றி அதனை உடனடியாக ஒப்படைப்பு செய்ய கலைஞர் டி.வி. ஏன் திடீர் முடிவு எடுத்தது?.

7. திடீரென்று இந்தக் 'கடனை' வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு கலைஞர் டி.விக்கு பணம் எங்கிருந்து கிடைத்தது?.

8. ஜெனிக்ஸ் எக்சிம் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற போர்வையில், தன்னுடன் நெருங்கி பழகியவர்களின் நிறுவனமான துபாயைச் சேர்ந்த குழுமம், டி.பி. ரியால்டி நிறுவனத்தால் ஊக்குவிக்கப்பட்ட ஸ்வான் டெலிகாம் குழுமத்தில் இடம் பெற்றதற்கு கருணாநிதியின் விளக்கம் என்ன?.

9. கருணாநிதி குடும்ப உறுப்பினர்களுக்கும், கருணாநிதிக்கு நெருக்கமாக உள்ளவர்களுக்கும் இடையே நடைபெற்ற பணப் பரிமாற்றத்தில், ஊடகங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட பரிமாணங்கள் எல்லாம் எங்கு இருக்கின்றன?.

10. "கனிமொழி என் மகள் என்பதற்காக நான் ஆதரவளிக்கவில்லை; கனிமொழி தி.மு.கவின் விசுவாசமிக்க உண்மையான தொண்டர் என்ற முறையில்" ஆதரவளிப்பதாகத் தெரிவித்து, கட்சியை இழிவுபடுத்த தனக்கு விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் கருணாநிதி!. இறுதி மூச்சுவரை கட்சிக்காக உழைக்கக் கூடியவர்கள், கட்சிக்காக தங்கள் உயிரைக்கூட கொடுக்கத் தயாராக இருக்கும் தொண்டர்கள் இது போன்ற பிதற்றலை நம்புவார்கள் என்று கருணாநிதி எதிர்பார்க்கிறாரா?.

1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்பது உண்மையாக நடந்த ஒன்று. ராசாவுக்கு இதில் நிச்சயம் தொடர்பு இருக்கிறது. கலைஞர் டி.வி. மற்றும் கருணாநிதி உட்பட, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். இங்கு மட்டுமல்லாமல், வரி ஏய்ப்பின் புகலிடமாக விளங்கும் வெளிநாட்டு வங்கிகளிலும் கருணாநிதி குடும்பத்தினர் பணத்தை குவித்து வைத்திருக்கின்றனர்.

கனிமொழியை மட்டும் குற்றப்பத்திரிகையில் சேர்த்ததன் மூலம் சி.பி.ஐ. தன்னுடைய பணியை சரிவர செய்யவில்லை என்று நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இந்த ஊழலில் கருணாநிதி குடும்பத்தினர் அனைவருக்கும் தொடர்பு உண்டு. அனைவரும் பயனடைந்துள்ளனர். நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால், 2ஜி ஊழலில் தொடர்புடைய கருணாநிதி குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.

காங்-திமுக உறவில் விரிசல் வராது: ஜெயந்தி நடராஜன்

சென்னை: 2ஜி விவகாரத்தால் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறினார்.


சென்னை கோபாலபுரத்தில் இன்று முதல்வர் கருணாநிதியை அவர் சந்தித்தார். அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் காயத்ரி தேவியும் உடனிருந்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களுக்கு ஜெயந்தி நடராஜன் அளித்த பேட்டி:

முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன். தமிழக தேர்தலை பொறுத்தவரையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெற்று, கலைஞர் ஆறாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கேள்வி: காங்கிரஸ்-திமுக கூட்டணியில் 2ஜி விவகாரத்தால் விரிசல் ஏற்பட்டுள்ளதா?

பதில்: காங்கிரஸ்-திமுக கூட்டணியில் எந்த விரிசலும் கிடையாது. 2ஜி பிரச்சனையை பொறுத்தவரையில், அது உச்ச நீதிமன்றத்திலே தொடங்கி பல்வேறு அமைப்புகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, காங்கிரஸ்-திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை.

Jayanthi Natarajan
கேள்வி: தமிழக இளைஞர் காங்கிரசிலே பிரச்சனைகள், தங்கபாலுவின் நடவடிக்கைகள் குறித்து உங்களுடைய கருத்து?

பதில்: தமிழக இளைஞர் காங்கிரசார் பிரச்சனையை பொறுத்த வரையில், தற்போது விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவடைந்ததும், அது குறித்த அறிக்கை ராகுல் காந்தியிடம் அளிக்கப்பட்டு, அவர்தான் இறுதி முடிவு எடுப்பார். அதே போன்று, தங்கபாலு பிரச்சனையை பொறுத்த வரையில், கட்சி மேலிடம் தான் இதுகுறித்து முடிவு செய்யும் என்றார்.

மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பதவியா? - கருணாநிதி பதில்

சென்னை: திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் முக ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி அளிக்கப்படுவது பற்றகி திமுக பொதுக்குழு முடிவு செய்யும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.


சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன் ஹெட்லைன் டுடே டி.வி.-இந்தியா டுடே சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் அதிமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இந் நிலையில், வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணியே வெல்லும் என்று தெரியவந்துள்ளதாக அதே தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பு குறித்து தொலைக்காட்சிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி விவரம்:

கேள்வி: சமீபத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.க. வெற்றி பெறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: பொதுவாக நான் கருத்துக் கணிப்புகளில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்தக் கருத்துக் கணிப்பு சரியாக இருக்குமேயானால், தொடர்ந்து அடுத்தடுத்து இந்தப் பத்திரிகை சார்பில் செய்யப்படுகின்ற கருத்துக் கணிப்புகளில் நம்பிக்கை வைப்பேன்.

கேள்வி: இதிலே எந்தெந்த விஷயங்கள் தி.மு.கவிற்கு ஆதரவாக வந்துள்ளன என்று நினைக்கிறீர்கள்?

பதில்: தி.மு.க. என்பது ஒரு இயக்கம். திராவிட இயக்கம். திராவிட இயக்கத்தின்பால் மக்களுக்கு ஓர் ஆர்வமும், அக்கறையும் உள்ளது. இது வெறும் இயக்கமாக மாத்திரம் இல்லாமல் ஆளுங்கட்சியாக வந்து மக்களுக்கு அண்மைக் காலத்தில் பல சாதனைகளைச் செய்து முடித்திருக்கின்றது. நம்பகத்தன்மை வாய்ந்த கட்சியாக மக்களுக்கு இது இருக்கின்றது.

கூட்டணி அமைச்சரவையா?:

கேள்வி: உங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், கூட்டணி அமைச்சரவைக்கு நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?, கூட்டணி அமைச்சரவை தான் அமையுமென்று நினைக்கிறீர்களா?

பதில்: சூழ்நிலைக்கேற்ப எங்கள் கட்சி முடிவெடுக்கும். கூட்டணி ஆட்சி என்பது கூடாது என்றல்ல, கூட்டணி ஆட்சிதான் மத்தியிலே நடக்கிறது.

கேள்வி: தேர்தலுக்கு முன்பு பல பேர் உங்கள் கட்சி ஆட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அவதூறுகளைச் சொன்னார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நீங்களே கேட்கும் போது அவையெல்லாம் அவதூறுகள் என்று சொல்லி கேட்டிருக்கிறீர்கள், அது அவதூறுகள் தான்.

சட்டரீதியாக சந்திப்போம்:

கேள்வி: மத்தியிலும் உங்கள் ஆட்சி தான் நடக்கிறது. இப்போது கருத்துக் கணிப்பில் நீங்கள்தான் வருவீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து உங்கள் ஆட்சி மீது வழக்குகள் வருகிறதே, அதெல்லாம் எப்படி இருக்கும்?

பதில்: வழக்குகளை நாங்கள் சட்ட ரீதியாகச் சந்திப்போம்.

கேள்வி: மக்களுக்கு ஏதாவது செய்தி சொல்ல விரும்புகிறீர்களா?

பதில்: இங்கே மேலே எழுதியிருக்கிறார்கள் பாருங்கள். "வாய்மையே வெல்லும்''. அதுதான் நான் சொல்ல விரும்பும் செய்தி.

ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி?:

கேள்வி: நீங்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் முதல்வராக தொடர்வீர்களா?, அல்லது ஸ்டாலின் முதல்வராவாரா?

பதில்: அதெல்லாம் எங்கள் கட்சியின் பொதுக்குழு முடிவு செய்ய வேண்டிய விஷயங்கள்.

கேள்வி: உங்களுடைய ஆசை என்ன?

பதில்: மக்கள் நன்றாக இருக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

Friday, April 29, 2011

வாக்கு எண்ணிக்கை பூத் வாரியாக எண்ணப்படும் : தேர்தல் அதிகாரி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
திருச்சி: வாக்கு எண்ணிக்கை முறையில் மாற்றம் இல்லை. பூத் வாரியாகவே எண்ணப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் 8 மாவட்ட அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற¢று நடந்தது. காலை 10 மணி முதல் 1 வரை திருவண்ணாமலை, கடலூர், கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டத்தினரும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை திருச்சி, நாமக்கல், விழுப்புரம் மாவட்டத்தினரும் இப்பயிற்சியில் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்ட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: வாக்கு எண்ணிக்கை மையங்களில் மே 13ம் தேதி கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக வெப் கேமரா மூலம் வாக்கு எண்ணிக்கை தொடர்பான அனைத்து விஷயங்களையும் பதிவு செய்கிறோம். வாக்கு எண்ணிக்கை முறையில் இந்த முறை எந்த மாற்றமும் கிடையாது. பூத் வாரியாகவே எண்ணப்படும். குலுக்கல் முறையில் எண்ணும் திட்டம் தற்போது இல்லை. இந்த திட்டம் பற்றி ஆய்வு செய்து வருகிறோம்.

போலீசார் குறைவான தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளதாக கூறுகின்றனர். தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் 12ஐ உயர் அதிகாரிகள் வாங்காமல் இருந்தால் அது தவறு. இதுதொடர்பாக அறிக்கை தருமாறு கேட்டுள்ளோம். தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வருவதற்கு முன்பே தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முயற்சித்து வருகிறோம். தேர்தல் வாக்கு எண்ணிக்கையன்று மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போட உள்ளோம். செல்போன், தீப்பெட்டி கொண்டு செல்ல அனுமதி கிடையாது. பத்திரிக்கையாளர்கள் அதிகமாக உள்ளதால் அவர்களை 4, 5 குழுக்களாக பிரித்து உள்ளே அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை: குரேஷி

அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை என, தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கருப்பு பணத்தை பயன்படுத்துவதாக, அம்மாநில வீட்டுவசதித்துறை அமைச்சர் குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து அவர் தேர்தல் ஆணையத்திடமும் அவர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குரேஷி, அமைச்சர் கவுதம் கொடுத்துள்ள புகாருக்கு தகுந்த ஆதாரம் இல்லை என்றார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த குரேஷி, தவறு செய்யும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் உரிமை தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. அந்த உரிமையை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார்.

பொறுத்து இருந்து பாருங்கள். கலைஞரிடம் தோற்பதற்கு காத்திருப்பவர்கள் எத்தனை பேர்


நடந்து முடிந்த தேர்தலின்போது, திமுகவின் பிரச்சார பீரங்கியாகப் பார்க்கப்பட்டார் வடிவேலு. இந்த பீரங்கி திமுகவின் கொள்களைப் பரப்பியதோ இல்லையோ, விஜயகாந்த் மீது சகதியை வாரிக் கொட்டியது.

ஜெயலலிதாவை மருந்துக்கும் தாக்கிப் பேசவில்லை. திரையுலகினருக்கு வடிவேலுவின் பேச்சு கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

இந்த நிலையில் தனது ராணா படத்துக்கு வடிவேலுவை ஒப்பந்தம் செய்து வைத்திருந்த ரஜினி, படம் துவங்கும் நேரத்தில் திடீரென்று நீக்கிவிட்டார். அவருக்குப் பதில் கஞ்சா கருப்புவை ஒப்பந்தம் செய்துள்ளார்.

திமுக வெற்றி உறுதி...

இந்த நிலையில், முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்துப் பேசினார் வடிவேலு. இச் சந்திப்பின்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உடனிருந்தார்.

அப்போது வடிவேலுவைச் சூழந்து கொண்ட நிருபர்கள், சந்திப்பின் நோக்கம் குறித்துக் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த வடிவேலு, "திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கருத்துக்கணிப்புகளை விட திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும். கடந்த 5 ஆண்டு காலத்தில் பயன் அடைந்தோர் பட்டியல் அதிகமாக இருப்பதால், கலைஞர் அய்யாவின் வெற்றி உறுதி. மக்களின் எழுச்சியை நான் பார்த்தேன்.

பிரச்சாரத்தில் 108 ஆம்புலன்ஸ் நுழைந்து போகும்போது மக்கள் ஆரவாரம் செய்தனர். குழந்தைகள் முட்டையை கையில் எடுத்து வந்து காட்டியது போன்றவைகளையெல்லாம் பார்க்கும்போது பயன் அடைந்தவர்கள் ஓட்டே திமுக கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்பை பெற்று தரும். ஏழை எளிய மக்கள் தங்களது நன்றி கடனை செலுத்தியுள்ளனர். இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வதற்காக கலைஞர் அய்யாவை இன்று நான் சந்தித்தேன்," என்றார்.

ராணாவோ காணாவோ...

விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ராணா படத்தில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறதே? என்று கேட்டதற்கு,

"ராணா படமாக இருக்கட்டும், காணா படமாக இருக்கட்டும், இல்ல வேற எந்தப் படமாக இருந்தாலும் என்னை தூக்குவதைப் பத்தி நான் கவலைப்படவே இல்லை.

மக்களைச் சென்றடைந்த திட்டங்களை பற்றித்தான் நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். இது ஒரு தவறா... இதுக்காக என்னை சினிமாவைவிட்டே தூக்கினாலும், அல்லது தூக்காவிட்டாலும் அதைப்பற்றி கவலைப்படமாட்டேன். வரும் 13ம் தேதிக்குப் பிறகு எல்லாம் மாறும். காட்சிகள் மாறும். அப்போ பேசிக்கிறேன்," என்றார் வடிவேலு.

அதிமுகவுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்ததுதான் அதற்கு பின்னடைவு என்று கூறுகிறீர்களா? என்று கேட்டதற்கு,

பொறுத்து இருந்து பாருங்கள். கலைஞரிடம் தோற்பதற்கு காத்திருப்பவர்கள் எத்தனை பேர் என்பது அப்போது தெரியும் என்றார்.

திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்!-தலைகீழான ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு

சென்னை: தேர்தலுக்கு முன்புவரை 'அதிமுகதான் ஜெயிக்கும், ஜெ முதல்வராவார்' என கூறிய இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி, இப்போது நிலைமை திமுகவுக்கே சாதகமாக உள்ளதாகக் கூறியுள்ளது.


ஹெட்லைன்ஸ் டுடேயும் ஓஆர்ஜி நிறுவனமும் இணைந்து தேர்தலுக்குப் பின் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

மே 10ம் தேதி வரை கருத்துக் கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பதால், எக்ஸிட் போல் எனும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்தவில்லை என்றும், வாக்களித்த மக்களிடம் கருத்துக் கேட்டு அதன் அடிப்படையில் இந்த முடிவுகளை வெளியிட்டிருப்பதாகவும் ஹெட்லைன்ஸ் டுடே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்த இரு தினங்களில் 6000 வாக்காளர்களைச் சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். 2009 நாடாளுமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

அதில், திமுக கூட்டணி 130 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் அதிமுக கூட்டணி 105 முதல் 120 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

திமுக மட்டும் தனியாக 90 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் வாய்ப்புள்ளதாகவும் இதில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ஹெட்லைன்ஸ் டுடே கூறியிருப்பதாவது:

"இந்தத் தேர்தலில் ஜெயித்து முதல்வராவது அம்மாவா, கலைஞரா? இதை அதிகாரப்பூர்வமாகத் தெரிந்து கொள்ள இன்னும் 15 நாட்கள் உள்ளன. ஆனால், இந்தியா டுடே- ஓஆர்ஜி இணைந்து மேற்கொண்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுகவின் கையே ஓங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதிமுக ஆட்சியமைக்க வாய்ப்பில்லை என்பதும் தெரிகிறது.

தேர்தலுக்கு கடைசி பதினைந்து நாளில், அதிமுகவை விட சிறப்பாக தேர்தல் பணியாற்றியதோடு, மக்களின் வாக்குகளைக் கவரும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளது திமுக.

இதன் விளைவு, இந்தத் தேர்தலில் 115 முதல் 130 தொகுதிகள் வரை திமுக கூட்டணிக்கே கிடைக்க வாய்ப்புள்ளது. அதிமுக அணி 105 முதல் 120 தொகுதிகள் வரை பெறக்கூடும். கடந்த தேர்தலை விட 33 முதல் 48 வரையிலான தொகுதிகளை திமுக இழந்தாலும், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்பது உறுதியாகியுள்ளது.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி, 36 முதல் 51 தொகுதிகள் வரை கூடுதலாகப் பெற்றாலும் ஆட்சியமைக்கும் வாய்ப்பில்லை.

இந்தத் தேர்தலில் சுவாரஸ்மான விஷயம், தேர்தலுக்கு முன்பு எடுத்த கருத்துக் கணிப்பில் 45 சதவீதம் பேர் திமுகவுக்கு ஆதரவாகப் பேசினார்கள். ஆனால் தேர்தலுக்குப் பின் கருத்துக் கணிப்பு நடத்தியபோது, 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் திமுகவுக்கே வாக்களித்ததாய் கூறியுள்ளனர்.

கிராமப் புறங்களில் 2ஜி, தமிழ் ஈழப் பிரச்சினைகள் எடுபடவில்லை. அங்கே அந்த மக்களின் தேவைகளை யார் சரியான முறையில் நிறைவேற்றினார்கள், நிறைவேற்றுவார்கள் என்பதே பிரதான பிரச்சனையாக இருப்பது இப்போது புரிகிறது. கிராமப் பகுதிகளில் திமுகவுக்கு பெரும் ஆதரவு நிலவுகிறது. அங்கு திமுக 5 சதவீதம் அதிகமாக வாக்குகளைப் பெறும்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, மொத்தத்தில் திமுக அணி 3 சதவீத வாக்குகளை கூடுதலாகப் பெறும் வாய்ப்புள்ளது. அதிமுகவுக்கு 7 சதவீத வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தாலும், கூட்டணி பலமின்மை அவருக்கு பாதகமாக உள்ளது. வைகோவை அவர் கடைசி நேரத்தில் இழந்திருக்கக் கூடாது. குறிப்பாக கடைசி நேரத்தில் அவரை புண்படுத்தி வெளியேற்றியது அதிமுகவுக்கு பெரிய பின்னடைவு. வைகோ இருந்திருந்தால் 3 சதவீத கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கும். அது கதையையே மாற்றியிருக்கும்.

இதுவே இந்தத் தேர்தலில் ஆட்சியை மீண்டும் திமுகவிடம் ஒப்படைக்கப் போதுமானதாக உள்ளது.

முன்பை விட அதிக தொகுதிகளைப் பெற்றாலும், அதிமுக எதிர்க்கட்சி வரிசையிலேயே உட்கார வேண்டிய நிலைதான் அடுத்த 5 ஆண்டுகளும்.

ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!!

இந்தத் தேர்தலில் ஜெயலலலிதா தோற்றாலும் சரி வென்றாலும் சரி முதல் பாதிப்பு விஜய்க்குத்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.


அது எப்படி?

ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் 52வது படம் வேலாயுதம். விஜய் பிறந்த நாளான ஜூன் -22ல் இப்படம் வெளியாகிறது. அதற்கேற்ப படத்தின் வேலைகள் படு வேகமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற மே 14ம் தேதி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்று, ஆடியோவை ரிலீஸ் செய்வார் என்று கூறப்படுகிறது.

மே- 13ம் தேதி சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வெற்றி பெற்ற அணி அடுத்த நான்கு நாட்களுக்குள் புதிய அமைச்சரவை அமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. காரணம் மே 17-ம் தேதியோடு இந்த சட்டமன்றத்தின் ஆயுள் முடிகிறது.

இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் இந்த விழாவைப் பற்றி, ஏன் விஜய் என்ற நடிகரைப் பற்றிக் கூட நினைக்க மாட்டார் ஜெயலலிதா. ஒருவேளை அதிமுக வென்றாலும் விஜய்க்கு இதே நிலைதான். புதிய அமைச்சரவை தயாராகிக் கொண்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் வேலாயுதத்துக்கு எப்படி நேரம் ஒதுக்க முடியும்!

இப்போது புரிகிறதா... ஜெயலலிதா தோற்றாலும் வென்றாலும் முதல்பாதிப்பு விஜய்க்குத்தான் என்பது!!

Thursday, April 28, 2011

கிருஷ்ணகிரியில் வாக்கு எண்ணும் மையத்தில் 10 அடி நீள பாம்பு புகுந்தது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையத்தில் 10 அடி நீள நல்லபாம்பு புகுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் அந்த பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 6 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியி்ல் வைக்கப்பட்டுள்ளது. கோடை மழையால் இந்த மையத்தில் விஷப்பாம்புகள் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை தான் 9 அடி நீள கட்டுவிரியான் பாம்பு இந்த மையத்திற்குள் நுழைந்தது. அதை மத்திய பாதுகாப்பு படையினர் பிடித்துக் கொண்டுபோய் காட்டு்ப்பகுதியில் விட்டனர்.

இந்நிலையில் இந்த மையத்தை பார்வையிட மாவட்ட கலெக்டர் வந்தார். அவர் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் ஓசூர் தொகுதி எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் 10 அடி நீள நல்லபாம்பு படம் எடுத்து நின்றது. அதை பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு வீரர் இரும்பு குழாயக்குள் போகவிட்டு இரு புறத்தையும் கட்டிவிட்டார். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பாம்பை வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.

வழக்கம்போல் மே தினம் கொண்டாட தேர்தல் ஆணையம் அனுமதி

மதுரை: தமிழகத்தில் மே தினம் கொண்டாட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தொழிலாளர் வர்க்கத்தின் உரிமை திருநாளான மே தினத்தை கொண்டாட போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அவர்கள் தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்திடம் தான் அனுமதி கேட்க வேண்டும் என்றார்கள்.

இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் இந்த ஆண்டும் வழக்கம்போல மே தினம் கொண்டாட அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்று மே தின நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி இதற்கான அனுமதி கடிதங்களை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளார். அதனால் மே தினத்தன்று வழக்கம்போல கொடியேற்றலாம், பேரணி, பொதுக்ககூட்டங்கள் நடத்தலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, April 26, 2011

2G scam: DMK meets tomorrow to review Congress ties

New Delhi:  With its First Family now officially accused of corruption, the DMK closed ranks today around Kanimozhi, the daughter of the party chief, M Karunanidhi.

He visited her at his home today - a clear signal that her battle in court will not be a lonely one. The DMK's bravado also includes a warning that it may opt out of the government at the Centre. A meeting tomorrow in Chennai will determine if that's likely.

Kanimozhi, who is widely accepted as her father's favourite child, was formally accused by the CBI yesterday of conspiring with A Raja to accept a massive bribe in India's largest-ever telecom scam. Mr Raja is also from the DMK; he is currently in jail. When he was Telecom Minister, he allegedly sold spectrum and mobile network licenses to companies at throwaway prices in return for super-size kickbacks. One of those bribes was routed to a TV channel owned largely by Kanimozhi and her stepmother, Dayalu Ammal.

The CBI has not bought Kanimozhi's explanation - the cheque for 214 crores was an investment in return for equity and that when the deal fell apart, the money was returned. She has been summoned to court on May 6 and faces the risk of being arrested."It was explained earlier and she will prove that she has nothing to do with the issues concerned...it's a regular business deal and we have time and again stated that it is a regular business deal, that's all...there is nothing more to it...", said TKS Elangovan, the DMK spokesperson.

The DMK has also declared its discontent with the fact that the interrogation of Kanimozhi and Dayalu Ammal in March was highly-publicized; and that days ago, the fact that Kanimozhi would be named in the CBI's chargesheet on the 2G scam was leaked to the media.

The DMK may believe the Congress has not shown it the respect that political allies merit from each other; but the fact is that the option before the party are in the slim to none category. Tamil Nadu has just voted for its next government - the DMK and Congress contested the election together. If the result is indecisive, the DMK will need the Congress to push it back into power. If Jayalalithaa's AIADMK wins, the DMK may need the Congress more than ever to protect it from a vengeful rival in a state where court cases are frequently used to settle political scores.

The DMK will decide its strategy at a meeting of its senior leaders tomorrow in Chennai. Its bargaining power with the Centre - especially the Congress - will hinge on the 18 MPs and six Union ministers that it currently offers to the UPA alliance.

தேர்தல் கமிஷன் விதிமுறைகளில் மாற்றம் தேவை

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என, மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த அத்தனை கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி, அவர்களின் பேராதரவு பெற்றுள்ளது தேர்தல் கமிஷன். இத்தனை நாட்களாக, ஆவணங்களில் மட்டும் தூங்கிக் கொண்டிருந்த விதிகளை நடைமுறைப்படுத்தியது தான் இந்த புகழுக்கு காரணம்.

ஆனால், தேர்தல் கமிஷனின் விதிகளுக்கு அனைத்து கட்சிகளும் கட்டுப்பட்டது போன்ற தோற்றம் மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. இந்த விதிகளால், அரசியல்வாதிகளுக்கு எந்த பெரிய பாதிப்பும் ஏற்படாது என்ற கருத்தும் இப்போது முளைவிட்டுள்ளது.பொதுவாக, தேர்தல் கமிஷன் விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்படுவது, வழக்கு பதிவு செய்யப்படுவது சில விஷயங்களுக்கு மட்டும் தான். குறிப்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்படும், "தனி' தொகுதியில், ஜாதியை மாற்றி குறிப்பிட்டு மனு தாக்கல் செய்வது, விதிமுறையை மீறி அதிக தொகை செலவு செய்தல், ஓட்டுக்கு பணம் கொடுப்பது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரசாரம் மேற்கொள்வது போன்ற விவகாரங்கள் தான் முன்னிலை பெறுகின்றன.

இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் பெரியளவில் இதுவரை தண்டிக்கப்படவில்லை. உதாரணமாக, கடந்த சட்டசபை தேர்தலில், ராஜபாளையம் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திரா, இந்து ஆதிதிராவிடர் என தவறாக குறிப்பிட்டு, தனித்தொகுதியில் போட்டியிட்டார் என, சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.இதை விசாரித்த ஐகோர்ட், சந்திரா எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றது செல்லாது என உத்தரவிட்டது. தொடர்ந்து சந்திரா தரப்பில் சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கு, "சந்திரா எம்.எல்.ஏ.,வாக தொடரலாம். ஆனால், வழக்கு முடியும் வரை, அவர், எம்.எல்.ஏ., பதவிக்குரிய சலுகைகளை பெறக் கூடாது' என, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரது பதவி காலம் முடியும் நேரத்தில், சந்திரா எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றது செல்லும் என, தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அடுத்ததாக, வேட்பாளர் சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, தேர்தல் கமிஷன் வேண்டுவது, அவர் குறித்து வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்கு தான். அதில், அவர் தன் சொத்தை குறைவாக காட்டியுள்ளாரா என்பதை எல்லாம் கவனித்து, நடவடிக்கை எடுக்க வேண்டியது வருமானவரித் துறை தான். எனவே, இந்த விஷயத்தில் தேர்தல் கமிஷனின் பங்கு குறைந்து விடுகிறது.வேட்பாளர் ஒருவர், தன் சட்டசபை தொகுதியில், 16 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்ய முடியும். ஆனால், அதை விட அதிகமாக அவர் செலவு செய்தது நிரூபணமானால், அவர் அடுத்த மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும் நிலையில், மூன்று ஆண்டுகள் போட்டியிட தடை விதித்தால், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பது நிதர்சனம்.இந்த சட்டசபை தேர்தலில், ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக மட்டும், 1,500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகளில், ஓட்டுக்காக பணம் கொடுத்தவர்; பெற்றவர் இருவரும் விசாரணையில், "பல்டி' அடிக்காமல் இருக்க வேண்டும். அடுத்ததாக, வேட்பாளர் சொல்லித்தான் பணம் கொடுக்கப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும். இத்தனையும் செய்தால் சம்பந்தப்பட்டவர் தண்டனை பெற வாய்ப்புண்டு.ஆனால், இந்த வழக்குகள் அனைத்தும் தேர்தல் முடிந்ததும் நீர்த்து போகக்கூடியவை.

அடுத்ததாக, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரசாரம் செய்தால், அது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்படும். இந்த வழக்கில் அதிகபட்சமாக அபராதம் மட்டுமே செலுத்த வேண்டி வரும் என்பதால், அது குறித்தும் அரசியல் கட்சிகள் கவலைப்பட வேண்டியதில்லை.இப்படி தேர்தல் கமிஷன் விதிகளில் ஓட்டைகள் இருந்தாலும், அரசியல் கட்சிகள் அதை மதித்து பின்பற்றியது ஆச்சர்யமான விஷயமே. ஒரு வேளை விதிமுறை மீறல் விவகாரம் ஓட்டுவங்கியை பாதிக்கும் என்று நினைத்து அவர்கள் பின்பற்றியிருக்கலாம். தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு மழை குவியும் அதே நேரத்தில், இது போன்ற விதிகளை காலத்திற்கு ஏற்ப மாற்றி, மீறினால் கடும் தண்டனைகள் விரைவாக கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Monday, April 25, 2011

WILL THE NEW CHARGESHEET IMPACT DMK-CONGRESS ALLIANCE?

The Congress and the DMK have both denied over the last few months that the investigation into the 2G scam has added to the tension in their skittish marriage in Tamil Nadu. In the campaign for the recently-held elections, Congress President Sonia Gandhi held a joint rally with Mr Karunanidhi. The parties broke up temporarily when negotiations for how many seats each would contest got tricky. After threatening to pull out of the UPA government at the Centre, the DMK blinked first. The Congress has made it clear that if its alliance with the DMK wins the election, it will want to participate in the government, instead of limiting its role to that of an external supporter.

2G scam: Will the new CBI chargesheet be the last straw in the Congress-DMK ties?

New Delhi:  The Central Bureau of Investigation (CBI) is all set to file a supplementary chargesheet in the 2G spectrum scam today. The chargesheet comes nearly three weeks after the first one which named former Telecom Minister A Raja, top telecom honchos and bureaucrats.

Sources in the CBI say that M Karunanidhi's daughter, Kanimozhi, and his wife, Dayaluammal, will both be accused of benefiting from the scam.

The chargesheet will focus on the Rs. 214 crore transaction involving the DMK family owned Kalignar TV and the alleged payoff routed to a subsidiary of Swan Telecom which is among the firms chargesheeted in the scam.

In 2008, Mr Raja allocated spectrum and mobile network licences at throwaway prices to companies that allegedly paid him huge kickbacks in return.

The CBI says it has evidence that a Rs. 214-crore bribe from Swan Telecom was routed through a maze of companies associated with Swan's promoter, Shahid Balwa, before it was finally deposited with Kalaignar TV in Chennai. Kanimozhi and Dayaluammal own 80% of the TV channel. The rest is owned by Managing Director Sharad Kumar, who is also expected to figure in the chargesheet. All three were interrogated by the CBI recently about the Swan bribe. They described the Swan payment as an offer for equity that was returned when the deal unravelled.

Mr Balwa is already in jail for this kickback; so is his partner at Swan, Vinod Goenka. Swan - along with Unitech Wireless and Reliance Telecom - has been described by the CBI as a company shown undue favour by Mr Raja. Top executives of these companies were chargesheeted on April 2 and are now in jail.

The new chargesheet will connect the dots between the start and finish points of the Rs. 214-crore kickback from Swan. Companies used on the way to transact the alleged bribe - like Cineyug Films and Kusegaon Fruits and Vegetables - will see their top executives figuring in the chargesheet. They're likely to include Karim Morani of Cineyug; Mr Balwa's brother Asif  and Rajiv Aggarwal who are both  associated with Kusegaon.

Besides, the second charge sheet may also throw some light on the role of Batcha who died in mysterious circumstances last month.

Names of Asif Balwa, cousin of Shahid Balwa, and Rajeev Agarwal, Directors of Kusegaon Fruits and Vegetables Pvt Ltd, who are presently in judicial custody, are also expected in the supplementary charge sheet.

Raja and eight others, including former telecom secretary Siddharth Behura and three telecom companies were on April 2 indicted in the 2G spectrum allocation scam by CBI, which pegged the loss to the exchequer at Rs. 30,984 crore.
  
The first chargesheet has named Behura, Raja's former Personal Secretary R K Chandolia, Unitech MD  Sanjay Chandra, Swan Telecom promoters Shahid Balwa and Vinod Goenka, Reliance ADA group's Gautam Doshi, Surendra Pipara and Hari Nair, Reliance Telecom, Unitech Wireless and Swan Telecom.

The CBI has informed the Supreme Court that the supplementary chargesheet will be filed before April 25 in the special court of Justice O P Saini and the probe in the case will be completed by May 31.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்று இரண்டாவது குற்றப்பத்திரிகை: தி.மு.க.,வுக்கு நெருக்கடி

புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்தான வழக்கில், இன்று இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. இதில், முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோரின் பெயர்கள் இடம் பெறும் என்ற பரபரப்பு அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக, மத்திய அரசுடனான தி.மு.க.,வின் உறவு நிலை என்ன என்பது இன்று தெரியும். உச்சகட்ட எதிர்ப்பாக தி.மு.க., மத்திய அரசில் இருந்து தன் அமைச்சர்களை வாபஸ் பெறும் நிலையும் ஏற்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., 17 மாதங்களுக்கு பின், தனது முதல் குற்றப் பத்திரிகையை, கடந்த 2ம் தேதி தாக்கல் செய்தது. மொத்தம் 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அவரின் அப்போதைய தனிச் செயலர் சந்தோலியா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா, சுவான் டெலிகாம் புரமோட்டர் ஷாகித் பல்வா, சுவான் டெலிகாம் இயக்குனர் விவேக் கோயங்கா, யுனிடெக் ஒயர்லெஸ் இயக்குனர் சஞ்சய் சந்திரா, அனில் திருபாய் அம்பானி குரூப் நிறுவனங்களின் அதிகாரிகள் கவுதம் டோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் ஹரி நாயர் ஆகிய ஒன்பது பேர் மீது, சதி செய்தது மற்றும் மோசடிக்கு உதவியாக இருந்தது உட்பட, இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் அரசு அதிகாரிகள், சுவான் புரமோட்டர் பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சேர்ந்த ஐந்து உயர் அதிகாரிகளுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சி.பி.ஐ., இரண்டாவது குற்றப் பத்திரிகையை இன்று தாக்கல் செய்ய உள்ளது.

அரசுக்கு சேர வேண்டிய வருவாயை மறைத்து, தனிப்பட்ட நபர்கள் தங்களின் சுய லாபத்துக்காக கோடிக்கணக்கில் சுரண்டியுள்ளனர். இப்படிப்பட்டவர்கள் எப்படி ஒதுக்கீடு பெற்றனர், எவ்வித மோசடிகளை செய்திருந்தனர் என்ற தகவல்கள் முதல் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்று இருந்தன.இதைத் தொடர்ந்து, ஒதுக்கீடு செய்து கொடுப்பதற்காக யார் யாரெல்லாம் எந்த வகையில் செயல்பட்டனர்; இதில் கிடைத்த கோடிக்கணக்கான பணம் எப்படியெல்லாம் கைமாறியது; அதை எங்கே முதலீடு செய்துள்ளனர் என்ற விவரம் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் இடம் பெற உள்ளது.

ஏனெனில், இப்பணியில் அமலாக்கத்துறை உதவியையும் சி.பி.ஐ., நாடி தகவல் கேட்டது. இதனால், பலரும் கதிகலங்கி உள்ளனர். இந்த வரிசையில், "2ஜி' ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற சுவான் நிறுவனத்தின் அங்கமான சினியுக் நிறுவனத்திற்கும், கலைஞர் "டிவி'க்கும் இடையே நடந்த 214 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம், குற்றப் பத்திரிகையில் இடம் பெற உள்ளது.

சினியுக் நிறுவனத்திடமிருந்து கடனாக பெறப்பட்ட தொகை திருப்பிச் செலுத்தப்பட்டு விட்டது என்று, கலைஞர் "டிவி' தரப்பில் இருந்து விசாரணையின் போது தெளிவாக தெரிவிக்கப்பட்டு விட்டது. கடன் கொடுத்தனரா, திருப்பிச் செலுத்திவிட்டனரா என்பது பற்றி பிறகு பார்த்துக் கொள்வோம். ஒதுக்கீட்டில் கிடைத்த முறைகேடான பணம் எப்படி கலைஞர் "டிவி'க்கு போய் சேர்ந்தது என்பதற்கும், கடன் போல ஆவணங்களெல்லாம் எப்படி திரித்துக் காட்டப்பட்டுள்ளது என்பதற்கும் தங்களிடம் ஆதாரம் உள்ளதாக சி.பி.ஐ., கூறுகிறது.இந்த பரிமாற்றத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை நடந்த விஷயங்களையெல்லாம் தொகுத்து யார், யாரெல்லாம் எப்படி சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குற்றப்பத்திரிகையில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. எனவே, கலைஞர் "டிவி'யில் பங்குதாரராக உள்ள கனிமொழி, தயாளு மற்றும் இயக்குனர் சரத்குமார் ஆகியோரது பெயர்கள் இடம் பெற உள்ளன.

இது தொடர்பாக, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களும், குற்றப் பத்திரிகையில் இடம் பெற உள்ளது என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. கலைஞர் "டிவி'யில் இவர்கள் இருவரும் 80 சதவீத பங்கு வைத்திருக்கின்றனர். சரத்குமாருக்கு 20 சதவீத பங்குள்ளது. இவர்கள் பெயர்கள் இடம் பெற்றால், அடுத்ததாக கைது படலம் தொடரும் என்பதால், தி.மு.க., தரப்பில் பரபரப்பு நிலவுகிறது. இருப்பினும் ஏற்கனவே முதல் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்ற சிலர் கோர்ட் வரை சென்று, கைதை தவிர்த்துள்ளனர்.முன்னாள் அமைச்சர் ராஜாவின் நெருங்கிய நண்பரான மறைந்த சாதிக் பாட்சாவின் முக்கிய பங்கு குறித்து, இரண்டாவது குற்றப் பத்திரிகையில் இடம் பெறலாம்.

இந்நிலையில், மத்திய அரசுடனான தி.மு.க.,வின் நிலை குறித்து முடிவு செய்யப்படும் சூழ்நிலையை தி.மு.க., சந்திக்க நேரிடும் என தெரிகிறது. அந்த நிலையில், மத்தியில் உள்ள தன் ஆறு அமைச்சர்களை ராஜினாமா செய்யச் சொல்லி தி.மு.க., மேலிடம் முடிவு செய்யலாம். அந்த நிர்பந்தத்தை தரக்கூடிய சூழ்நிலையை இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் ஏற்படுத்தலாம் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

இலங்கை தமிழர்களுக்காக மன்னிப்பு கேட்க வேண்டியவர் ஜெயலலிதாதான்! -கருணாநிதி

சென்னை: இலங்கை தமிழர்களுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டியது நானல்ல, ஜெயலலிதாதான் என்று கருணாநிதி கூறியுள்ளார்.


தி.மு.க. தலைவர், முதல்வர் கருணாநிதி நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"இலங்கையில் நடந்த இனப்படுகொலையை வேடிக்கை பார்த்ததற்காக, கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்''-ஆணை பிறப்பித்திருப்பவர் யார் தெரியுமா? 'சாட்சாத்' ஜெயலலிதாதான். எங்கிருந்து இந்த வார்த்தை முத்துக்களை அவர் சிந்தியிருக்கிறார் தெரியுமா? கோடைவாசஸ்தலமான கொடை நாடு எஸ்டேட்டில் தங்கியிருந்து கொண்டு. பாவம் அங்கும் என் மீது வசைமாரி பொழிய ஏதாவது கிடைக்காதா என்ற நினைவோடு, ஓய்வெடுக்க முடியாமல் இலங்கை தமிழர்களுக்காக மனம் வருந்தி, என்னை பொது மன்னிப்பு கேட்க சொல்லுகிறார்.

யாரை மன்னிப்பு கேட்க சொல்கிறார் ஜெயலலிதா?

திமுக நடத்திய போராட்டங்கள்...

1956-ம் ஆண்டிலே சிதம்பரம் தி.மு.க. பொதுக்குழுவிலே அண்ணாவின் முன்னிலையில் இலங்கை தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்த என்னைத்தான் ஜெயலலிதா பொது மன்னிப்பு கேட்க சொல்கிறார்.

24.8.1977 அன்று சென்னையிலே இலங்கை தமிழர் பிரச்சினைக்காக ஐந்து லட்சம் பேர் கலந்து கொண்ட பேரணியை நடத்தியவன் நான்.

1981-ம் ஆண்டு இலங்கையிலே தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி கிடைத்த அன்றைய தினமே, ஆம் ஆகஸ்ட் 13-ம் தேதியன்றே-'கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் இலங்கையின் கிழக்கிலும் தெற்கிலும் கலவரங்கள் பரவி வருகின்றன என்று தெரிவிக்கின்றன. அங்குள்ள அரசே கலவரத்தை ஊக்குவிப்பதாக தோன்றுகிறது. வடகொழும்பில் தமிழர்களின் இல்லங்கள் தாக்கப்படுகின்றன, யாழ்ப்பாணம் ரெயில்கள் தாக்கப்படுகின்றன. அதில் இருந்த தமிழ் பயணிகள் கொள்ளையடிக்கப்பட்டு வண்டியை விட்டு வழியில் தூக்கியெறியப்பட்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினையை தீர்க்க மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டுகிறேன்'' என்று பிரதமருக்கு தந்தி கொடுத்த இந்த கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.

சிறைக்குப் போனேன்....

அதே 1981-ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15-ம் நாள் இலங்கை தமிழர்களுக்கான பிரச்சினையில் அன்றிருந்த அ.தி.மு.க. அரசினால் கைது செய்யப்பட்ட கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.

25.7.1983 அன்று வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சிங்களர் நுழைந்து தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்ற 35 தமிழர்களை படுகொலை செய்தபோது தமிழகத் தலைநகரிலே 7 மணி நேர அவகாசத்தில் 8 லட்சம் பேரை திரட்டி பேரணி நடத்திய நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.

மத்திய, மாநில அரசுகள் ஈழத் தமிழர் பிரச்சினையில் போதிய கவனம் செலுத்திட வலியுறுத்தி 10.8.1983 அன்று நானும், கழக பொதுச் செயலாளர் பேராசிரியரும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்தோம்.

16.5.1985 அன்று காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டு கைதானேன்.

டெசோ மாநாடு

23.8.1985 அன்று சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து சென்னையில் பேரணி நடத்தி, நாடு கடத்தும் காரியம் நிறுத்தப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என்று நான் அறிவித்து, அதனையொட்டி நாடு கடத்தல் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், அவர்களிடையே சகோதர யுத்தம் கூடாதென்பதற்காகவும், 1986-ம் ஆண்டு மே திங்களில் மதுரையில் பொதுச்செயலாளர் பேராசிரியர், தமிழர் தலைவர் கி.வீரமணி, முரசொலி மாறன், வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட 'டெசோ' அமைப்பின் சார்பில் அனைத்திந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களையெல்லாம் அழைத்து இலங்கை தமிழர் பாதுகாப்பு மாநாட்டினை நடத்திய இந்த கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.

3.6.1986 அன்று என்னுடைய பிறந்த நாள் விழா ரத்து செய்யப்பட்டு, அன்று உண்டியல் மூலம் வசூலான நிதியினை போராளி இயக்கங்களுக்காக பகிர்ந்து கொடுத்தவன் நான்.

1987-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி தி.மு.க. சார்பில் பேரணி நடத்தினோம்.

16.10.1987 அன்று தளபதி கிட்டுவை காணச்சென்ற வைகோ கைது செய்யப்பட்டதற்காக கண்டன அறிக்கை விடுத்தவன் நான்.

ஆட்சியையே இழந்தேன்...

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக எட்டு மாநில முதல் அமைச்சர்களுக்கும் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தவனும் நான் தான்.

6.11.1987 அன்று சென்னையில் ஈழத் தமிழர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு கட்சியினர், தமிழ்ப் புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், மகளிர் கலந்து கொண்ட மனிதச் சங்கிலியை நடத்தியவனும் நான்தான்.

15.3.1989 அன்று டெல்லியில் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை இரண்டு முறை சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினைக்காக விவாதித்தவனும் நான்தான்.

15.1989 அன்று சென்னை விமான நிலையத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து இலங்கை பிரச்சினை குறித்து பேசியவனும் நான் தான்.

1991-ம் அண்டு ஜனவரியில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தி.மு.க. ஆட்சியே கலைக்கப்பட்டபோது, முதல்வராக இருந்ததே நான்தான்.

ஜெயலலிதா என்ன சொன்னார்?

1997-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோது, இலங்கை தமிழர் பிரச்சினை எழுந்த நேரத்தில் தற்போது என்னை பொது மன்னிப்பு கேட்க சொல்கிற ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா?

"சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கருணாநிதி முயல்கிறார் - விடுதலைப் புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கி விட்டார்கள்'' என்று அறிக்கை அல்லவோ ஜெயலலிதா விடுத்தார்.

5.11.1989 அன்றும் 6.11.1989 அன்றும் தமிழ்நாட்டில் பேசிய ராஜீவ்காந்தி, "இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கடந்த பல மாதங்களாக ஒத்துழைப்பு வழங்கி வரும் தி.மு.க. அரசுக்கும் முதல்வர் மு.கருணாநிதிக்கும் நன்றி'' என்று கூறினார். இவ்வாறு இளந் தலைவர் ராஜீவ் காந்தியால் பாராட்டப்பட்ட நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.

23.4.2008 அன்று தமிழக சட்டப்பேரவையில்- 'இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, அங்கே மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிவுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகளுக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன் வரவேண்டுமென இப்பேரவை வலியுறுத்துகிறது'' என்ற தீர்மானத்தை முன்மொழிந்த நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.

கைது செய்ய வேண்டும்

6.10.2008 அன்று காலையில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு-புதுடெல்லியில் உள்ள இலங்கை தூதரை மத்திய அரசு உடனடியாக அழைத்து, நிராயுதபாணியாக உள்ள இலங்கை தமிழர்களை கொல்வது குறித்து இந்தியாவின் மன வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும் இனப்படுகொலையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம். சொல்பவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?

'இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது' என்று தமிழக சட்டப்பேரவையில் 16.4.2002 அன்று தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றிய ஜெயலலிதாதான் என்னைப் பொது மன்னிப்பு கேட்கச் சொல்லுகிறார்.

வெட்கக் கேடு

இலங்கையில் ராஜபக்சேயின் சிங்கள படையினர் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தபோது, அதனை கண்டித்து தமிழகத்தில் ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றபோது, 'இலங்கை தமிழர்களை கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம்-ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம்-போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், இலங்கை தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லவிடாமல் விடுதலைப்புலிகள் அவர்களை பிடித்து வைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்' என்று 17.1.2009 அன்று அறிக்கை விடுத்த ஜெயலலிதா என்னை பொது மன்னிப்பு கேட்க சொல்கிறார் என்றால், இதைவிட வெட்கக்கேடு வேறு ஏதாவது இருக்க முடியுமா?

அது மட்டுமா? இலங்கையில் தமிழ் இனப் படுகொலையை கண்டித்து, போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய போது-இதே ஜெயலலிதாதான் 'விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை' என்று கூறியதோடு - இலங்கையில் நடக்கும் யுத்தம் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் என்னும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம் என்றும்-அதனால்தான் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் இறந்ததற்கு கருணாநிதி இரங்கற்பா எழுதுகிறார் என்றும் அறிக்கை விடுத்து-அந்த அறிக்கையை; இன்றைக்கு ஜெயலலிதாவின் அறிக்கையை வெளியிடுகின்ற சில ஏடுகளே வெளியிட்டனவே!

ஜெயலலிதாவுக்கு தகுதி உண்டா...

இலங்கையில் வாழுகின்ற ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகவும்-இரண்டாம் நிலை குடிமக்கள் என்று ஒதுக்கப்படுவதிலிருந்து அந்த மக்கள் இலங்கையில்-எல்லா உரிமைகளையும் பெற்று சமத்துவமாகவும், சமநீதியும் பெற்று வாழும் வகை வகுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக 1956 முதல் குரல் கொடுத்து வரும் தி.மு.க.வையும்-அந்த கழகத்தின் தலைவனாக இருக்கின்ற என்னையும் இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே குறை கூறுவதற்கு ஜெயலலிதா தகுதி படைத்தவர்தானா?

தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து அரசின் சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக கலந்தாலோசனை நடத்திய நேரத்தில், ஜெயலலிதா அதனையும் 'கபட நாடகம்' என்றுதான் வர்ணித்தார்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதும்-நம்பி வந்தவர்களை நட்டாற்றில் கை நழுவ விடுவதும்-பதவியிலே இருக்கும் போது மிரட்டுவதும், பதவி கோரும்போது கெஞ்சுவதும்-யாரையும், எவரையும் மதிக்காமல் தன்னை மீறி எதுவுமில்லை என்ற ஆணவப்போக்கோடு நடப்பதும் ஜெயலலிதா போன்ற 'கபட வேடதாரி'களுக்குத்தான் கைவந்த கலையே தவிர-உழைப்பு, அறப்போராட்டம், தியாகம், அரவணைப்பு, நாகரிகம், பண்பாடு, சுயமரியாதை என்பனவற்றை மதித்து நடக்கும் நான் பொது மன்னிப்பு கேட்கின்ற நிலை என்றைக்கும் வராது. உண்மையில் இலங்கை தமிழர்களுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டியவர் ஜெயலலிதாதான்.

-இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Saturday, April 23, 2011

ரிஷிவந்தியம் தொகுதியில் மக்கள் யார் பக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில், 11 தொகுதிகளில், தி.மு.க., கூட்டணியில், தி.மு.க., ஐந்து இடங்களிலும், பா.ம.க., மூன்றிலும், வி.சி., இரண்டிலும், காங்., ஒன்றிலும் போட்டியிட்டன. அ.தி.மு.க., கூட்டணியில், அ.தி.மு.க., ஏழு தொகுதிகளிலும், தே.மு.தி.க., மூன்றிலும், கம்யூ., ஒன்றிலும் போட்டியிட்டன.
ஓட்டுப்பதிவு சதவீத அடிப்படையில், தொகுதியின் தற்போதைய நிலை குறித்த அலசல் தொடர்ச்சி:
விழுப்புரம்: இத்தொகுதியில், 2 லட்சத்து, 9 ஆயிரத்து, 250 வாக்காளர்களில், 87 ஆயிரத்து, 530 ஆண்கள், 86 ஆயிரத்து, 254 பெண்கள், மூன்று திருநங்கைகள் உட்பட, 1 லட்சத்து, 73 ஆயிரத்து, 794 பேர் ஓட்டளித்துள்ளனர். தி.மு.க., அமைச்சர் பொன்முடி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் நேரடியாக மோதினர்.அரசின் சாதனைகள், இலவசங்கள், தேர்தல் நேர கவனிப்பு, இவை தான், 82 சதவீதம் ஓட்டு பதிவாக காரணம் என, அமைச்சர் தரப்பினர் கூறுகின்றனர். அரசு ஊழியர்கள், பா.ம.க., வி.சி., கூட்டணி பலம், அ.தி.மு.க.,வில் கோஷ்டி பிரச்னை இவை தங்களுக்கு சாதகம் என்றும் தி.மு.க.,வினர் கணிக்கின்றனர்.தி.மு.க., ஆட்சியின் ஊழல், கட்சியினர் மற்றும் மக்களிடம் அமைச்சர் பொன்முடியின் அணுகு முறை, தே.மு.தி.க., கூட்டணி பலம், பா.ம.க., - வி.சி., உள்ளடி வேலைகள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என, அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.தொகுதிக்கு பல நன்மைகள் செய்திருந்தாலும், அமைச்சரின் அணுகுமுறையால் பல்வேறு இடங்களில் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டார். இதிலிருந்து அமைச்சர் மீண்டு(ம்) வருவாரா என்பது சந்தேகமே.
விக்கிரவாண்டி: இத்தொகுதியில், 1 லட்சத்து, 86 ஆயிரத்து, 627 வாக்காளர்களில், 77 ஆயிரத்து, 238 ஆண்கள், 74 ஆயிரத்து, 514 பெண்கள், திருநங்கை ஒருவர் உட்பட, 1 லட்சத்து, 51 ஆயிரத்து, 864 ஓட்டுகள் பதிவாகின. தி.மு.க.,வில் ராதாமணி, அ.தி.மு.க., கூட்டணியில், மா.கம்யூ., வக்கீல் ராமமூர்த்தி நேரடியாக மோதினர். தி.மு.க., வெற்றி உறுதியாக இருந்த நிலையில், "கவனிப்பு' முறையாக சென்று சேராததால், அதிருப்தியில் ஓட்டுகள் சிதறியுள்ளன.அதே போல், விக்கிரவாண்டி பேரூராட்சி, தி.மு.க., தலைவர் கொலையால், இரு மையங்களில் குறைந்த அளவே ஓட்டுகள் பதிவானது. இது, தி.மு.க.,வுக்கு பின்னடைவாகியுள்ளது.
வானூர்: இத்தொகுதியில், 1 லட்சத்து, 96 ஆயிரத்து, 054 வாக்காளர்களில், 81 ஆயிரத்து, 230 ஆண்கள், 77 ஆயிரத்து, 236 பெண்கள் உட்பட, 1 லட்சத்து, 58 ஆயிரத்து, 699 பேர் ஓட்டளித்தனர். தி.மு.க.,வில் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், அ.தி.மு.க., ஒன்றிய முன்னாள் சேர்மன் ஜானகிராமன் போட்டியிட்டனர். கூட்டணி பலம், முழு கவனிப்பும் தங்களுக்கு வெற்றியைத் தருமென தி.மு.க., பலமாக நம்பியுள்ளது.புஷ்பராஜின் வளர்ச்சியை விரும்பாதவர்கள், பா.ம.க., அதிருப்தியாளர்கள், தொகுதியை பறி கொடுத்த வி.சி.,யின் அதிருப்தி இவையெல்லாம், அ.தி.மு.க.,விற்கு சாதகமாக உள்ளது. தே.மு.தி.க.,வினர் அதிகம் உள்ள தொகுதி என்பதால், வெற்றி கிடைக்குமென, அ.தி.மு.க., நம்பியுள்ளது.
சங்கராபுரம்: இத்தொகுதியில், 2 லட்சத்து, 8 ஆயிரத்து, 710 வாக்காளர்களில், 83 ஆயிரத்து, 496 ஆண்கள், 87 ஆயிரத்து, 3 பெண்கள் உட்பட, 1 லட்சத்து, 70 ஆயிரத்து, 499 பேர் ஓட்டளித்துள்ளனர். தி.மு.க., வேட்பாளர் உதயசூரியன், அ.தி.மு.க., மோகன் இருவருமே இறுதி வரை சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றினர்.கடைசி நேர கவனிப்புகளால், இவரும் சம பலத்தில் உள்ளனர். இங்கு பெண்கள் அதிகம் ஓட்டளித்துள்ளதால் இருவருமே தங்களுக்கு சாதகமாக இருக்கும் என கூறுகின்றனர். மாற்றத்தை மக்கள் விரும்பினரா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
திருக்கோவிலூர்: இத்தொகுதியில், தி.மு.க., - தே.மு.தி.க., இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. தி.மு.க., சார்பில் தங்கம், தே.மு.தி.க., சார்பில் வெங்கடேசன் போட்டியிட்டனர். தொகுதியில் அதிகம் வசிக்கும் உடையார் சமூகத்தையும், பணபலத்தையும் நம்பி, கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பின்றி, தங்கம் தேர்தலை சந்தித்தார்.தொண்டர் பலம், கூட்டணி கட்சிகள் ஆதரவு வெங்கடேசனுக்கு கை கொடுத்துள்ளது. விஜயகாந்த், பிரேமலதா ஆகியோரின் பிரசாரம் வெங்கடேசனுக்கு பிளஸ் பாயின்ட்.ரிஷிவந்தியம்: இங்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், காங்., சிவராஜ் களத்தில் உள்ளனர். வி.ஐ.பி., அந்தஸ்தை பெற்றுள்ள
இத்தொகுதியில், 2 லட்சத்து, 6 ஆயிரத்து, 729 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 79 ஆயிரத்து, 296 ஆண்கள், 91 ஆயிரத்து, 771 பெண்கள் உட்பட, 1 லட்சத்து, 71 ஆயிரத்து, 67 பேர் ஓட்டளித்தனர்.தே.மு.தி.க.,விற்கு சாதகமாக உள்ள, 23 ஆயிரம் ஓட்டுகள், அ.தி.மு.க., கூட்டணி ஓட்டுகள், ஆளுங்கட்சி மீது அதிருப்தி, கடைசி நேர பிரசாரம் தங்களுக்கு உதவும் என, தே.மு.தி.க., நம்புகிறது. கூட்டணி பலம், தேர்தல் பிரசார வியூகம், இறுதி கட்ட கவனிப்புகள், ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாதது போன்றவை தங்களுக்கு சாதகமாக இருக்கும் என, காங்கிரஸ் தரப்பு நம்புகிறது.மாற்றத்தை விரும்பும் நடுநிலை வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள், அதிகளவு பதிவான பெண்கள் ஓட்டுகள், தே.மு.தி.க.,விற்கு சாதகமாக இருக்கும்.

2ஜி ஸ்பெக்ட்ரம்: குற்றப் பத்திரிகையில் தயாளு அம்மாள்-கனிமொழி பெயர்?

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் சிபிஐ வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிகையில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரின் பெயர்களும் இடம் பெறும் என்று தெரிகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு இது பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டி.பி ரியாலிட்டி நிறுவனம் தனது இன்னொரு நிறுவனமான சினியுக் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியளவுக்கு நிதியதவி அளித்தது. இதை கலைஞர் டிவி வட்டியோடு திருப்பித் தந்துவிட்டாலும், அந்த நிதியுதவியை டிபி ரியாலிட்டி ஏன் தந்தது என்பது கேள்வியாகியுள்ளது.

குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கித் தந்தததற்கு லஞ்சமாகவே இந்தப் பணத்தை கலைஞர் டிவிக்கு அந்த நிறுவனம் தந்ததாக சிபிஐ கருதுகிறது.

இதையடுத்து கலைஞர் டிவியின் நிர்வாகி சரத் குமார் ரெட்டியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. கலைஞர் டிவி அலுவலகத்திலும் சோதனை நடத்திய சிபிஐ, அதன் பங்குதாரர்கள் என்ற வகையில் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரிடமும் விசாரணை நடத்தியது.

இந் நிலையில் சிபிஐ திங்கள்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிக்கையில் தயாளு அம்மாள், கனிமொழி எம்.பி. ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த 2ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் 80,000 பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது நினைவிருக்கலாம். அதில், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா, நீரா ராடியா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அதிகாரிகள், ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாஹித் உஸ்மான் பல்வா, இயக்குனர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லெஸ் நிறுவன இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் டெலிகாம் அதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரிகள் கெளதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகியோர் மீது சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.

இந் நிலையில், வரும் திங்கள்கிழமை துணை குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. இதில், தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்படும் என்று தெரிகிறது.

Thursday, April 21, 2011

3,407 voters exercise option of 49(O)

A total of 3,407 voters in the 16 constituencies of the city exercised the option of 49(O) during the assembly elections held on Wednesday.
Saidapet constituency, with 360 candidates, had the largest number of such voters who decided not to vote for any candidate after the electoral roll number had been duly entered in the register of voters in Form-17A.

Villivakkam had the least with 15 voters exercising the option of 49 (O).
Thiyagaraya Nagar – 330, Chepauk-Thiruvallikeni – 313, Perambur – 294, Egmore – 274, Mylapore – 260, Thousand Lights – 243, Thiru-Vi-Ka Nagar, 228, Virugampakkam – 211, Kolathur – 209, Anna Nagar – 209, Harbour – 155, Dr. Radhakrishnan Nagar – 136, Royapuram – 99, and Velachery – 71.
The election observers on Friday left the city after the 17A scrutiny was completed on Thursday. The recommendations of observers along with the scrutiny of the Register 17-A will be taken into consideration for deciding on re-poll or disciplinary action against any delinquent polling staff. The observers will be present during the counting of votes. A total of 5,390 postal ballots have been issued by the District Election Office. All public servants appointed on election duty can cast their votes through postal ballot system. The District Election Office had also issued postal ballot to 240 inmates of the Puzhal prison

print