Thursday, April 28, 2011

வழக்கம்போல் மே தினம் கொண்டாட தேர்தல் ஆணையம் அனுமதி

மதுரை: தமிழகத்தில் மே தினம் கொண்டாட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தொழிலாளர் வர்க்கத்தின் உரிமை திருநாளான மே தினத்தை கொண்டாட போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அவர்கள் தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்திடம் தான் அனுமதி கேட்க வேண்டும் என்றார்கள்.

இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் இந்த ஆண்டும் வழக்கம்போல மே தினம் கொண்டாட அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்று மே தின நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி இதற்கான அனுமதி கடிதங்களை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளார். அதனால் மே தினத்தன்று வழக்கம்போல கொடியேற்றலாம், பேரணி, பொதுக்ககூட்டங்கள் நடத்தலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

print