Tuesday, April 12, 2011

அ.தி.மு.க.,வில் இணைந்தார் தி.மு.க., எம்.எல்.ஏ.,

நாகர்கோவில் : நாகர்கோவில் தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் அ.தி.மு.க.,வில் இணைந்தார். நாகர்கோவில் தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ராஜன். இவருக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு வழங்க தி.மு.க., மறுத்துவிட்டது. இதனால் இவர் தேர்தல் பணியில் ஈடுபடாமல் அமைதியாக ஒதுங்கியிருந்தார். ஒரு சில நாட்கள் மட்டும் கன்னியாகுமரி தொகுதியில் சுரேஷ்ராஜனுக்கு ஆதரவாக பணியாற்றினார். இந்நிலையில் ராஜன் இன்று அ.தி.மு.க.,வின் தளவாய்சுந்தரம் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.

No comments:

print