Friday, April 1, 2011

நேர்மையான தேர்தல் நடத்த முழு அதிகாரம்: தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் ஆதரவு தீர்ப்பு

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை நேர்மையாகவும் , நியாயமாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் கமிஷன் எடுக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்து விட்டது . தேர்தல் கமிஷன் சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறது என்றும், சோதனை என்ற பெயரில் மக்களை துன்புறுத்துவதாகவும் எனவே தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். இதன் படி தேர்தலை நியாயமாக நடத்தும் வகைக்கு தேர்தல் கமிஷனுக்கு எல்லா அதிகாரமும் உண்டு என்றும் , கமிஷன் எடுக்கும் நடவடிக்கை அதிகாரத்தில் தலையிட முடியாது என்றும் , அநேரத்தில் நடத்தப்படும் சோதனைகள் தொடர்பாக உரிய ஆவணங்கள் பராமரித்து கொள்ளப்பட வேண்டும் என்றும் கமிஷனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.

உரிய ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்யக்கூடாது. இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் குறித்து ஆளும்கட்சியினர் அதிருப்தி தெரிவித்திருந்த நேரத்தில் இந்த தீர்ப்பு வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

print