Friday, April 29, 2011

அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை: குரேஷி

அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை என, தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கருப்பு பணத்தை பயன்படுத்துவதாக, அம்மாநில வீட்டுவசதித்துறை அமைச்சர் குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து அவர் தேர்தல் ஆணையத்திடமும் அவர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குரேஷி, அமைச்சர் கவுதம் கொடுத்துள்ள புகாருக்கு தகுந்த ஆதாரம் இல்லை என்றார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த குரேஷி, தவறு செய்யும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் உரிமை தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. அந்த உரிமையை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார்.

No comments:

print