Saturday, April 30, 2011

காங்-திமுக உறவில் விரிசல் வராது: ஜெயந்தி நடராஜன்

சென்னை: 2ஜி விவகாரத்தால் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறினார்.


சென்னை கோபாலபுரத்தில் இன்று முதல்வர் கருணாநிதியை அவர் சந்தித்தார். அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் காயத்ரி தேவியும் உடனிருந்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களுக்கு ஜெயந்தி நடராஜன் அளித்த பேட்டி:

முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன். தமிழக தேர்தலை பொறுத்தவரையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெற்று, கலைஞர் ஆறாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கேள்வி: காங்கிரஸ்-திமுக கூட்டணியில் 2ஜி விவகாரத்தால் விரிசல் ஏற்பட்டுள்ளதா?

பதில்: காங்கிரஸ்-திமுக கூட்டணியில் எந்த விரிசலும் கிடையாது. 2ஜி பிரச்சனையை பொறுத்தவரையில், அது உச்ச நீதிமன்றத்திலே தொடங்கி பல்வேறு அமைப்புகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, காங்கிரஸ்-திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை.

Jayanthi Natarajan
கேள்வி: தமிழக இளைஞர் காங்கிரசிலே பிரச்சனைகள், தங்கபாலுவின் நடவடிக்கைகள் குறித்து உங்களுடைய கருத்து?

பதில்: தமிழக இளைஞர் காங்கிரசார் பிரச்சனையை பொறுத்த வரையில், தற்போது விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவடைந்ததும், அது குறித்த அறிக்கை ராகுல் காந்தியிடம் அளிக்கப்பட்டு, அவர்தான் இறுதி முடிவு எடுப்பார். அதே போன்று, தங்கபாலு பிரச்சனையை பொறுத்த வரையில், கட்சி மேலிடம் தான் இதுகுறித்து முடிவு செய்யும் என்றார்.

No comments:

print