Monday, April 4, 2011

அழகிரி மீது பொய்ப் புகார் எனக் கூறிய ஆர்டிஓ சுகுமாறன் சஸ்பெண்ட்

சென்னை: மதுரை கலெக்டர் சகாயத்தின் கட்டாயத்தின் பேரில்தான் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது பொய்ப் புகார் கூறியதாகவும், தன்னை சகாயம் கடுமையாக மிரட்டி வருவதாகவும், இப்படியே போனால் தான் தற்கொலை செய்யப் போவதாகவும் கூறிய மதுரை ஆர்டிஓ சுகுமாறன் இன்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

நெஞ்சு வலிப்பதாக இவர் கூறியதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

No comments:

print