அதிமுக மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. கூட்டணி வெற்றி பெற்றதும், புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்கவிருந்த என். ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஆனால், தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற எனக்கு வாழ்த்து தெரிவிக்கக்கூட என்.ரங்கசாமிக்கு மனமில்லை. நன்றி மறந்து நாணயமற்ற முறையில் நடந்து கொண்டிருக்கிறார். அதிமுக ஆதரவுடனும், செல்வாக்குடனும் வெற்றி பெற்றுவிட்டு ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநரிடம் உரிமை கோரச் செல்லும் போது ஒரு வார்த்தை கூட எனக்குத் தெரிவிக்காமல், அதிமுக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை உறுப்பினரின் ஆதரவுடன் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருப்பது கூட்டணி தர்மத்திற்கு விரோதமான செயல்.
நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் என்.ரங்கசாமி. முதுகில் குத்துவதில் எல்லோரையும் மிஞ்சிவிட்டார். கூட்டணிக் கட்சியுடனேயே நாணயமற்ற முறையில் நடந்து கொண்டுள்ள என்.ரங்கசாமி, மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார்? புதுச்சேரி முதல்வரின் ஏமாற்று நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக, ஓர் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக புதுச்சேரியில் செயல்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment