Wednesday, May 18, 2011

கொளத்தூர் வாக்காளர்களுக்கு ஸ்டாலின் நன்றி

சென்னை: கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று வீதிவீதியாகச் சென்று, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தன்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நேற்று மாலை கொளத்தூர் தொகுதிக்குச் சென்றார். கொளத்தூர் ஜி.கே.எம்.காலனி, முத்து மாரியம்மன் கோவில் தெருவிலிருந்து திறந்த ஜீப்பில் வீதிவீதியாகச் சென்று, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். ராதாகிருஷ்ணன் நகர், இளங்கோ நகர், சாய் நகர், பெரவள்ளூர் சதுக்கம், பெரியார் நகர், ராமமூர்த்தி சாலை, பாலாஜி நகர், குமரன் நகர், வெற்றி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று நன்றி தெரிவித்தார். அவருடன் சென்னை மேயர் சுப்ரமணியன், மாஜி மாவட்டச் செயலர் வி.எஸ்.பாபு, வக்கீல் அசன்முகமது ஜின்னா உள்ளிட்டோர் சென்றனர். ஸ்டாலின் சென்ற ஜீப்பைப் பின்தொடர்ந்து, அவரது மனைவி துர்கா காரில் தொகுதி முழுவதும் சென்றார். நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்றும், நாளையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

print