Monday, May 16, 2011

ஜெயலலிதா கோட்டையில் பொறுப்பேற்றார்

சென்னை: தமிழக முதல்வராக இன்று பிற்பகல் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா, மாலை கோட்டையில் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தனது போயஸ் கார்டன் வீட்டிலிருந்து கிளம்பி சரியாக மாலை 6.40 மணியளவில் கோட்டை வந்த அவருக்கு, அரசு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் முதல்வர் அறைக்கு வந்த அவர், முதல் கோப்பில் கையெழுத்திட்டார். முதல்வர் வருகைக்காக போக்குவரத்து தடை செய்யப்படவில்லை.

No comments:

print