Sunday, May 8, 2011

அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.தலைமைச் செயலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு பிரவீன் குமார் தலைமை தாங்கினார். அதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., உள்ளிட்ட 8 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது வாக்கு எண்ணிக்கை குறித்தும், அது எப்படி நடைபெறவுள்ளது என்பது குறித்தும் பிரவீன் குமார் விளக்கினார். பின்னர் ஒவ்வொரு கட்சி சார்பிலும் அவர்களது கருத்துக்களைப் பிரதிநிதிகள் விளக்கினர்

No comments:

print