Monday, March 28, 2011

சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, பரிகார பூஜைகள் செய்து வழிபட்டார்.காரைக்கால் திருநள்ளாரில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பகவானுக்கு தனி சன்னிதி உள்ளது. இக்கோவிலில் சனிப் பெயர்ச்சி காலத்தில் லட்சக்கணக்கிலும், சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, திருநள்ளார் சனி பகவானை தரிசனம் செய்ய நேற்று முன்தினம் காரைக்கால் வந்தார். மதியம் 12.10 மணிக்கு கோவிலுக்கு வந்த ராஜாத்தி, முதலில் சொர்ணகணபதி, சுப்பிரமணியர், திருமால், தர்பாரண்யேஸ்வரர், பிரணாம்பிகை அம்பாளை வழிபட்டு, இறுதியாக சனீஸ்வர பகவானை தரிசிக்க வந்தார்.ராஜாத்தி சார்பில், சனி பகவானுக்கு தயிலாபிஷேகம் நடத்தப்பட்டு, பரிகார பூஜைகள் நடந்தன. பின், எள்தீபம் ஏற்றப்பட்டு, காக்கைக்கு சாதம் அளிக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் ராஜாத்திக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சாமிதரிசனம் முடிந்து, மதியம் 1.10 மணிக்கு, ராஜாத்தி காரில் புறப்பட்டு சென்றார்.

No comments:

print