Monday, March 28, 2011

பிரச்சாரம்: தமிழகம் வருகிறார்கள் அத்வானி, மோடி

பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, நரேந்திர மோடி, நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்துக்காக விரைவில் தமிழகம் வரவுள்ளனர்.இத்தகவலை அக்கட்சியின் அகில இந்தியச் செயலர் முரளிதர ராவ், இன்று கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

’’மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில், கோவை மற்றும் திருப்பூரில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். வெங்கையா நாயுடு ஏப்ரல் 6, 7 தேதிகளிலும், பாஜக தலைவர் நிதின் கட்கரி ஏப்ரல் 7, 8 ஆகிய தேதிகளிலும் தமிழகத்தில் பிரசாரம் செய்கின்றனர்.

குஜராத் முதல்வர் மோடி ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வர திட்டமிட்டுள்ளார். அத்வானி வருகைக்கான தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்’’என்று கூறினார்.

No comments:

print