Monday, March 28, 2011

முரசுக்கு இடைக்கால தடை கோரி வழக்கு

மதுரையை சேர்ந்தவர் முரளிமோகன். இவர் தாக்கல் செய்த ரிட் மனுவில், ’’திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்துகிறேன். முரசு படம் பொறித்த பனியன்களை உற்பத்தி செய்து, விற்பனைக்கு அனுப்புகிறேன். முரசு படத்தை பயன்படுத்த காப்புரிமை சட்டத்தில் பதிவு செய்துள்ளேன்.சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் கமிஷன் பல நிபந்தனைகளை விதித்துள்ளது.

முரசு படம் பொறித்த பனியனை வெளியூர்களுக்கு கொண்டு செல்லும்போது, ஏதாவது அரசியல் கட்சிகளுக்கு எடுத்து செல்லப்படலாம்என போலீசார் பறிமுதல் செய்ய வாய்ப்பு உள்ளது. முரசை எந்த கட்சிக்கும் சின்னமாக ஒதுக்க கூடாது. இவ்வாறு ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கும் நிலையில், தேர்தல் கமிஷன் தே.மு.தி.க., வுக்கு அச்சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதனையடுத்து இன்று மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்த முரளி மோகன்,

முரசு சின்னத்தை தே.மு.தி.க.,வுக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளதற்கு இடைக்கால தடை வேண்டும் என்றும், தே.மு.தி.க.,வையும் வழக்கில் ஒரு தரப்பாக இணைக்க வேண்டும்’’ என்றும் கூறியுள்ளார்.

No comments:

print