Sunday, March 27, 2011

வடலூரில் இன்று கனிமொழி பிரசாரம்

குறிஞ்சிப்பாடி:கடலூர் மாவட்டத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி., இன்று பிரசாரம் செய்கிறார்.தி.மு.க., மாவட்டச் செயலரும், குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளருமான பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடலூர் மாவட்டத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி., இன்று பிரசாரம் செய்கிறார். மாலை 4 மணிக்கு திட்டக்குடி தொகுதி வி.சி., வேட்பாளர் சிந்தனைச் செல்வனை ஆதரித்து பெண்ணாடத்திலும், விருத்தாசலம் காங்., வேட்பாளர் நீதிராஜனை ஆதரித்து மாலை 5 மணிக்கு கருவேப்பிலங்குறிச்சி, 5.30 மணிக்கு விருத்தாசலம், 6.30 மணிக்கு மந்தாரக்குப்பத்தில் பிரசாரம் செய்கிறார்.இரவு 7 மணிக்கு வடலூரில், குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்தும், 7.30 மணிக்கு சேத்தியாத்தோப்பில் புவனகிரி பா.ம.க., வேட்பாளர்அறிவுச்செல்வனை ஆதரித்தும், இரவு 8 மணிக்கு காட்டுமன்னார்கோவிலிலும், 8.30 மணிக்கு குமராட்சியிலும் வி.சி., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்தும், இரவு 9 மணிக்கு சிதம்பரத்தில் மூவேந்தர் முன்னேற்றக் கழக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்தும் பிரசாரம் செய்கிறார்.இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

print