Thursday, March 31, 2011

பூத் சிலிப் வழங்க தாமதம்: ஆசிரியர்கள் சாலை மறியல்

திருச்சி: வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்குவதற்காக அழைக்கப்பட்ட ஆசிரியர்கள், தேர்தல் கமிஷன் காக்க வைத்ததால் அதிருப்தியடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு இந்த தேர்தலில் தேர்தல் கமிஷனே பூத் சிலிப் வழங்குகிறது. ஆசிரியர்கள் மூலம் இப்பணியை நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதன்படி, திருச்சியில் பூத் சிலிப் பெறுவதற்காக, ஆசிரியர்கள் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர். மாலை 3.30 மணிக்கு வந்த அவர்கள் 5 மணியாகியும் எவ்வித பதிலும் இல்லாததால், அதிருப்தியடைந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

print