Monday, March 28, 2011

புரட்சியோடு புரட்சி இணைந்துள்ள மெகா வெற்றிக் கூட்டணி-பிரேமலதா விஜயகாந்த்

பேராவூரணி: புரட்சியோடு புரட்சி இணைந்துள்ளது. எனவே இந்த மெகா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்திற்கு நல்லாட்சியைத் தரும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.


பேராவூரணி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரும், நடிகருமான அருண் பாண்டியனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புரட்சியோடு புரட்சி இணைந்துள்ளது. இது மாபெரும் வெற்றியைப் பெறப் போகும் மெகா கூட்டணியாகும்.

இந்தக் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு நல்லதொரு ஆட்சியைத் தரும் என்றார் பிரேமலதா.

தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தனது பிரசாரத்தின்போது விஜயகாந்த்தைப் போலவே இவரும் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

print