Thursday, February 24, 2011

அ.தி.மு.க., சார்பில் போட்டியிட 12 ஆயிரம் பேர் விருப்ப மனு

சென்னை : அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோர் மனுக்கள் தாக்கல் செய்ய, நேற்று இறுதி நாள் என்பதால், கட்சியினரின் கூட்டம் அலைமோதியது. நேற்றுடன், 12 ஆயிரம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்கள், கடந்த 5ம் தேதி முதல், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் பெறப்பட்டன. அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என, பல்வேறு தொகுதிகளுக்கு பலர் மனு தாக்கல் செய்தனர்.

இதுதவிர, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஜெகதீசன், தென்காசிக்கு முருகேசன், அம்பாசமுத்திரம் தொகுதிக்கு ராகவன், விருகம்பாக்கம், ஆயிரம் விளக்கிற்கு வைத்தியநாதன், விருகம்பாக்கத்திற்கு வக்கீல் சக்தி சண்முகராஜா, சோழிங்கநல்லூருக்கு எம்.சி.முனுசாமி, ஆர்.கே.நகருக்கு வக்கீல் பால்கனகராஜ், கொளத்தூருக்கு சுந்தர், கன்னியாகுமரிக்கு நாஞ்சில் அன்பழகன் உட்பட, பலர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மனு தாக்கல் செய்வதற்கு நேற்று கடைசி நாள் என்பதால், கட்சியினரின் கூட்டம் அலைமோதியது. கடந்த 19 நாட்களாக பெறப்பட்ட மனுக்கள், 12 ஆயிரம் வரை எட்டியுள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

print