Monday, February 28, 2011

ஜெயலலிதாவிடம் கட்சி வளர்ச்சி நிதி

சென்னை : புதுச்சேரி, மதுரை மற்றும் காஞ்சிபுரம் அ.தி.மு.க., நிர்வாகிகள் சார்பில், கட்சி வளர்ச்சி நிதி நேற்று அளிக்கப்பட்டது. அ.தி.மு.க., தலைமை கழக செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநில அ.தி.மு.க., செயலர் அன்பழகன், மதுரை மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் டேவிட் அண்ணாதுரை மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலர் கந்தன் ஆகியோர், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தனர். அப்போது, கட்சியின் வளர்ச்சி நிதியாக முறையே 51 லட்சம், 8 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் 10 லட்சத்து எட்டாயிரம் ரூபாயை ஜெயலலிதாவிடம் வழங்கினர்.

No comments:

print