Tuesday, February 22, 2011

தி.மு.க., - விடுதலை சிறுத்தைகள் பேச்சு

சென்னை : தி.மு.க., மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் இடையே, தொகுதிப் பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சு, அறிவாலயத்தில் நேற்று நடந்தது. தி.மு.க., சார்பில், துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில், அக்கட்சியின் தலைவரும், எம்.பி.,யுமான திருமாவளவன், ரவிக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் பங்கேற்றனர்.



திருமாவளவன் கூறியது: பேச்சுவார்த்தை, இரு தரப்பிற்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது அடுத்த கட்டத்தில் முடிவாகி, விரைவில் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படும். முதல் முறையாக பா.ம.க.,வுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறோம். வட மாவட்டங்களில் குறைந்தது, 110 தொகுதிகளில் இக்கூட்டணி வெற்றிபெறும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

No comments:

print