Thursday, February 24, 2011

தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்க ஐவர் குழு

சென்னை: சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கு, ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், "நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க., தேர்தல் அறிக்கையை தயாரிக்க, அமைப்பாளர் நாதன், உறுப்பினர்கள் ரகுமான் கான், சுப்புலட்சுமி ஜெகதீசன், இளங்கோவன் எம்.பி., அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.

No comments:

print