Friday, February 25, 2011

தேர்தல் கால சலுகைகள் அள்ளி வரும் ரயில் : மக்களுக்கான ரயில்வே பட்ஜெட் என்கிறார் மம்தா

புதுடில்லி: இரு மாநில தேர்தல் நெருங்கி வருவதால் மக்களை பாதிக்காத வகையில் , கட்டணம் உயர்த்தப்படாமல் இந்த 2011- 2012 ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தாக்கல் செய்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மம்தா தாக்கல் செய்வது இது 3 வது பட்ஜெட் ஆகும்.

இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த மம்தாவை நிருபர்கள், புகைப்படக்ககாரர்கள் சூழ்ந்து கொண்டு படமெடுத்தனர். ரயில்வே துறையின் நிதி ஆதாரம் கையைப்பிடித்தாலும், பயணிகள் கட்டணத்தில் கை வைக்க மம்தாவுக்கு விருப்பமில்லை . பட்ஜெட் போடப்படுவது மக்களுக்காக , மக்களால் உருவாக்கப்படும் பட்ஜெட் இதனால் இது ஒவ்வொரு சாதாரண மனிதனையும் பாதிக்காது என்று இன்று பார்லி.,க்கு வந்த போது மம்தா கூறினார்.

இந்த பட்ஜெட்டில் தேர்தல் நடக்கவிருக்கும் மேற்குவங்கம், தமிழகம் ஆகியவற்றை குறி வைத்து மக்களை கவரும் சிறப்பு திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரயில் பயணிகளுக்கு வழங்கப்பெறும் உணவு திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி புதிய திட்டம் அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக 100 ரயில்களும், 12 அதிவேக தூரந்தோ ரயில்களும் இன்று அறிவிக்கப்படும் என தெரிகிறது.

No comments:

print