Wednesday, February 16, 2011

தமிழகம் முழுவதுமே பதட்டம்தான் : நெல்லையில் டி.ஜி.பி., பகீர் தகவல்

திருநெல்வேலி : தமிழக சட்டசபை தேர்தலில் போலீசார், அரசியல் சார்பில்லாமல் பணியாற்றுவார்கள் என, டி.ஜி.பி., லத்திகா சரண் தெரிவித்தார்.திருநெல்வேலியில் புதிய டி.ஐ.ஜி., அலுவலகத்தையும், புதிதாக கட்டப்பட்டுள்ள ஐந்து போலீஸ் ஸ்டேஷன்களையும் நேற்று லத்திகா சரண் திறந்துவைத்தார்.அப்போது அவர் கூறியதாவது: தேர்தலில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், மோதல்களை தடுக்கவும் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன. தேவைப்பட்டால் துணை ராணுவப் படையினரும் தேர்தலின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்தலையொட்டி, யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. தேர்தலின் போது போலீசார், எந்த அரசியல் கட்சிக்கும் சார்பில்லாமல் பணியாற்றுவார்கள். பதட்டமான தொகுதி என எதையும் தனியாக குறிப்பிடமுடியாது. இப்போதைக்கு தமிழகம் முழுவதுமே பதட்டம் நிறைந்தவைதான், என்றார்.நிகழ்ச்சியில், தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், தென்மண்டல ஐ.ஜி., பாலசுப்பிரமணியன், நெல்லை டி.ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

No comments:

print