Wednesday, February 16, 2011

கையில் இருப்பதோ நான்கு அட்டைகள் ஆனாலும் ஓட்டுப் போட உரிமையில்லை

மரக்காணம் : மரக்காணத்தில் வருவாய் துறை அலட்சியத்தால், ஒரு பெண்ணுக்கு நான்கு முறை வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் மண்டவாய் தெருவை சேர்ந்த பாண்டுரங்கன் மனைவி ஷீலா (40). கடந்த சட்டசபை தேர்தலின் போது, இவருக்கு இரு வரிசை எண்ணில், இரண்டு முறை வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. தற்போது கடந்த வாரம் அதேபோல், ஒரு புகைப்படத்துடன் கூடிய இரண்டு வாக்காளர் அடையாள அட்டை, இரண்டு முகவரியில், வருவாய் துறையினர் ஷீலாவிற்கு வழங்கியுள்ளனர். ஆனால், இவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை.
இது பற்றி ஷீலா கூறியதாவது:

கடந்த தேர்தலின் போது, என் புகைப்படத்துடன் கூடிய இரண்டு அடையாள அட்டைகளை வருவாய் துறையினர் வழங்கினர். அப்போது ஓட்டு போட்டேன். தற்போது, அதேபோல் இரண்டு புகைப்படங்களுடன் கூடிய அட்டை வெவ்வேறு முகவரியில் வந்துள்ளது. இதேபோல் பலருக்கும் இரண்டு அடையாள அட்டைகள் வந்துள்ளது. ஆனால், வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லாததால், ஓட்டுப்பதிவு செய்ய முடியாது என அதிகாரிகள் கூறிவிட்டனர். இவ்வாறு ஷீலா தெரிவித்தார்.

No comments:

print