Tuesday, February 15, 2011

தமிழக ஆட்சியில் பங்கு வேண்டும் : இளைஞர் காங்., மீண்டும் வலியுறுத்தல்

நாகர்கோவில்: ""தி.மு.க., - காங்., கூட்டணி வெற்றி பெற்று அமைக்கும் ஆட்சியில், காங்கிரசுக்கு பங்கு வேண்டும்,'' என, மாநில இளைஞர் காங்., தலைவர் யுவராஜா தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெறும். தேர்தலுக்கு பின் அமையும் இந்த ஆட்சியில் காங்., பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். அதற்கேற்ப காங்., குறைந்தபட்சம் 80 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்.வெற்றி வாய்ப்புள்ள 80 தொகுதிகளை கண்டறிந்து, பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சி பற்றி ஐவர் குழுவை சந்தித்து இளைஞர் காங்., வலியுறுத்தியுள்ளது.எனினும், சோனியா மற்றும் ராகுல் தான் இதில் இறுதி முடிவு எடுப்பர். கூட்டணி வெற்றிக்கு இளைஞர் காங்., தொண்டர்கள் கடுமையாக பாடுபடுவர்.காமன்வெல்த், ஆதர்ஷ் வீட்டு ஊழல் வழக்குகளில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுத்தது போல, ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு யுவராஜா கூறினார்.

No comments:

print