Monday, March 28, 2011

காங்.வேட்பாளர் மாயமான விவகாரம் : தேர்தல் ஆணையத்தில் தங்கபாலு மீது ‘திடுக்’ புகார்

சென்னை: ‘கிருஷ¢ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மக்பூல் ஜான் வேட்பு மனு தாக்கல் செய்யாததற்கு தங்கபாலுதான் காரணம்’ என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக முதலில், சென்னையை சேர்ந்த ஹசீனா சையத் அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவர் உடனடியாக வேட்பு

மனுதாக்கலும் செய்தார். இதற்கு, கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ஹசீனா சையத் அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக மக்பூல் ஜான் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அவருக்கும் காங்கிரஸ்  சார்பில் எதிர்ப்பு கிளம்பியது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி வரை மக்பூல்ஜான் மனு தாக்கல் செய்யவில்லை. அவர் ‘திடீரென’ மாயமானார். அவர் எங்கே போனார்;

எதற்காக வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை என்ற விவரம்   தெரியவில்லை.

இந்நிலையில், கோட்டையில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரை, மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் சாந்தி நேற்று சந்தித்து புகார் மனு கொடுத்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
காங்கிரஸ் கட்சி சார்பில் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹசீனா சையத்திடம், தங்கபாலு ரூ.50 லட்சம் வாங்கி உள்ளார். அதில், ரூ.10 லட்சத்தை காங்கிரஸ் கட்சியால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட மக்பூல் ஜானுக்கு கொடுத்து,

வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்து விட்டார்.

எனவே, லஞ்ச பணம் கொடுத்ததாக தங்கபாலுவை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இப்படி பணம்

வாங்கி கொண்டு ஜனநாயகத்தை கேலி குத்தாக்கிய தங்கபாலுவை, உடனடியாக கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

print