Saturday, March 26, 2011

தேர்தல் வாக்குறுதிக்கு தடை விதிக்க வழக்கு

சென்னை: சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நலன் வழக்கில் கூறியிருப்பதாவது: தமிழக தேர்தலில் திமுக, அதிமுக கட்சித் தலைவர்கள், ‘‘தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் இலவச லேப்டாப், கிரைண்டர் வழங்கப்படும்’’ என்று வாக்காளர்களுக்கு அறிவித்துள்ளனர். இதனால், அரசு பணம் வீணாகிறது. விலைவாசி உயர்கிறது. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போல உள்ளது. எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு, அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.

No comments:

print