Thursday, March 31, 2011

விஜயகாந்த்தை அதிமுக கூட்டணி கட்சியினரே நம்பவில்லை-திருமா

அரூர்: ஆயிரக்கணக்கானோர் மத்தியில் வேட்பாளரை அடித்து உதைக்கும் விஜயகாந்த் வெற்றி பெற்றார் நாடு என்ன ஆகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவவன் கேள்வி எழுப்பினார்.


தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம் செய்து பேசுகையில்,

திமுக அறிவித்துள்ள திட்டங்கள் மூலம் சமூகத்தில் பின்தங்கிய, ஏழை, எளிய மக்கள் பயன் அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிக வாக்கு வங்கி கொண்ட கட்சிகளான திமுக, காங்கிரஸ், பாமக ஓரணியில் உள்ளதால் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

எந்தக் கட்சி தலைவராவது சொந்த கட்சி வேட்பளாரை பொது இடத்தில் தாக்குவார்களா?. வேட்பாளர் என்ன சொன்னார், பெயரை தப்பா சொல்லாதையா என்று சொன்னார். பெயரை பாண்டியன் பாண்டியன் என்று சொல்லாதையா. பாஸ்கர் என்று சொல்லுயா என்று வேட்பாளர் சொல்லுகிறார்.

என்னையே எதிர்த்து பேசுகிறாயா, உங்க அப்பா உனக்கு பாஸ்கர் என பெயர் வைத்திருக்கலாம். நான் பாண்டியன் என்றுதான் கூப்பிடுவேன் என்று சொல்லி விஜய்காந்த் தாக்கியுள்ளார்.

இவரைப் போன்றவர் எல்லாம் வென்றால், ஆட்சிக்கு வந்தால் நாடு என்ன ஆகும் என்றார்.

பின்னர் மேட்டூரில் நிருபர்களிடம் பேசிய திருமா, கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியின் சாதனைகள் பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பாமகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் சேர்ந்திருப்பது திமுக கூட்டணிக்கு வலுசேர்த்துள்ளது.

நடிகர் விஜயகாந்த்தின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அவரது மதிப்பை குறைத்து வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ளவர்களே விஜயகாந்த்தை நம்புவதில்லை என்றார்.

No comments:

print