Saturday, March 26, 2011

முதலைக்கண்ணீர் வடிக்கிறார் ஜெ., : கருணாநிதி தாக்கு

சென்னை: இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை, தான் ஆட்சிக்கு வந்தால் மேலும் உயர்த்துவதாக ஜெயலலிதா கூறியுள்ளதற்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். ஜெ.,வின் இந்த கூற்று முதலைக்கண்ணீர் என்றும் அவர் வர்ணித்துள்ளார். திருச்சியில் பிரசாரம் மேற்கொண்ட அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு தற்போதுள்ள 3.5 சதவீத இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா முதலைக்கண்ணீர் வடிப்பதாகவும், இதைப்பார்த்து இஸ்லாமியர்கள் ஏமாறமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

print