Wednesday, March 30, 2011

மீண்டும் கருணாநிதி முதல்வரானால் தமிழகம் ஒளிமயமான நாடாகும் : தங்கபாலு

சென்னை: ‘‘மீண்டும் கருணாநிதி முதல்வராக பதவி ஏற்கும்போது தமிழ்நாடு ஒளிமயமான நாடாகத் திகழும்’’ என்று காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார். தான் போட்டியிடும் மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலு இன்று வீதிவீதியாக பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக, கோபாலபுரத்தில் முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்து தங்கபாலு வாழ்த்து பெற்றார். பின்னர், 115வது வட்டம் எல்டாம்ஸ் ரோடு  தேனாம்பேட்டை சிக்னல் அருகே பிரசாரத்தை தொடங்கினார். அவருடன் அவரது மனைவி ஜெயந்தி தங்கபாலுவும் ஆதரவு திரட்டினார். மாசிலாமணி தெரு, வெங்கட்ராமன் தெரு, திருவள்ளுவர் சாலை, அருந்ததி நகர் ஆகிய இடங்களில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். தங்கபாலுவுக்கு அப்பகுதி மக்கள் சால்வைகள் அணிவித்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின்பு தங்கபாலு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றேன். அவர் 6வது முறையாக முதல்வராக வருவார். அவர் பதவி ஏற்கும் போது தமிழ்நாடு ஒளிமயமான நாடாக மாறும். மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது. இதனால் திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்’’ என்றார்.

No comments:

print