Monday, March 28, 2011

காங். அதிருப்தி வேட்பாளர்கள் வாபஸ் பெற வேண்டும்-ஜி.கே.வாசன் கோரிக்கை

சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் இன்னும் பிரசாரத்தைத் தொடங்கவில்லை. இளங்கோவன் எங்கே போனார் என்பது தெரியவில்லை. ப.சிதம்பரத்தைக் காணவில்லை. கார்த்தி சிதம்பரத்தைக் காணவில்லை. ஜி.கே.வாசனையும் காணவில்லை. தங்கபாலுவுக்கு ஏகப்பட்ட சிக்கல். எப்போது மீண்டு வருவார் என்று தெரியவில்லை.

இந்த நிலையில் நேற்றுதான் வாசன் கோஷ்டியினர் தூக்கம் கலைந்து விழித்து, தஙக்ளது பிரசாரப் பாடல்கள் அடங்கிய வெற்றிகீதம் என்ற ஆடியோவை ரிலீஸ் செய்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார் வாசன். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

மத்திய, மாநில அரசுகள் செய்துள்ள நலத்திட்ட உதவிகளால் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். இரண்டு பாராளுமன்ற தேர்தல், கடந்த சட்டமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணி வெற்றி, நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்.

திமுக தேர்தல் அறிக்கை மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஏனென்றால் கடந்த தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்கட்சிகளின் தேர்தல் அறிக்கையை மக்கள் நிராகரிப்பார்கள். தேர்தல் பிரச்சாரத்தை வரும் 30ஆம் தேதி தொடங்குகிறேன்.

திமுக கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ள போட்டி வேட்பாளர்கள் குறிப்பாக காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் அதிலிருந்து விலகிக் கொண்டு கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்றார் வாசன்.

No comments:

print