Saturday, March 26, 2011

அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் : விஜயகாந்த்!

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு சட்டசபை தொகுதி தேமுதிக வேட்பாளர் அனகை டி. முருகேசனை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று கூடுவாஞ்சேரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, 'தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைத்தால், ஆட்சியில்  நாங்கள் பங்கு கேட்க மாட்டோம். எங்கள் கூட்டணியை விமர்சனம் செய்பவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்போம். செங்கல்பட்டு தொகுதி மக்களின் பிரச்னைகள் தீர முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்' என்றார். இந்த பிரசாரத்தின்போது தேமுதிக காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் ஏ.எஸ். கரீம், நகர செயலாளர் சந்தானம், பேரவை துணை செயலாளர் எம்.ஜி.மூர்த்தி, டி.சதீஷ்குமார், அதிமுக ஒன்றிய செயலாளர் சம்பத்குமார், நகர செயலாளர் சீனிவாசன், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தேவராஜ், கோவிந்தராஜ், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

No comments:

print