Monday, March 28, 2011

குடிநீர் பிரச்னையை தீர்க்க புதிய காவிரி திட்டம் : ஜெயலலிதா பேச்சு

கரூர்: குடிநீர் பிரச்னையை தீர்க்க புதிய காவிரி நீர் திட்டம் கொண்டுவருவோம் என  ஜெயலலிதா தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கரூர் வந்தார். அங்கிருந்து பிரசார வாகனம்

மூலம் கரூர் திருவள்ளுவர் மைதானத்திற்கு வந்தார். பிரசார வாகனத்தில் இருந்தபடி அதிமுக வேட்பாளர்கள்  கரூர் தொகுதி செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி செந்தில்நாதன், கிருஷ்ணராயபுரம் (தனி) காமராஜ் ஆகியோருக்கு வாக்கு கேட்டு

ஜெயலலிதா பேசியதாவது:  கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். குறிப்பாக விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். இதை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை

வெற்றிபெற செய்தால்  விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுப்பேன். பெட்ரோல் விலை மட்டும் கடந்த ஓராண்டில் ரூ.15 அதிகரிக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளை காரணமாக சாதாரண மக்கள் வீடு கட்டுவது கனவாக உள்ளது. மின் மிகை

மாநிலமாக இருந்த தமிழகம்  மின் வெட்டு மாநிலமாக மாறிவிட்டது. இதனால் தொழில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் மூலம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.
காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு பிரச்னைகளை தீர்க்க முடியவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்கமுடியவில்லை. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், தலித்கள், அரசு ஊழியர்கள் தாக்கப்படுகின்றனர். அரசு

ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படுகிறது.

சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காணப்படும். குடிநீர் பிரச்னையை தீர்க்க புதிய காவிரி குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும். எனவே உங்கள் பேராதரவை அதிமுகவுக்கே அளியுங்கள். பின்னர் திருச்சி மாவட்டம் முசிறிக்கு சென்றார்.
பெரம்பலூர்: பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), துரை.காமராஜ் (குன்னம்), துரை மணிவேல் (அரியலூர்), இளவழகன் (ஜெயங்கொண்டம்) ஆகியோருக்கு ஆதரவாக பிரசாரம்

செய்ய ஜெயலலிதா முசிறியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நேற்று மாலை 4க்கு பெரம்பலூர் வந்தார்.  பெரம்பலூர் பாலக்கரை அருகே ஜெயலலிதா பேசுகையில்,‘ அதிமுக ஆட்சிக்கு வந்தால் அரியலூர் தனி மாவட்டமாகவே செயல்படும். அரசு

ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும்‘ என்றார்.

No comments:

print