Sunday, March 27, 2011

தேர்தல் பார்வையாளர்ஷாலினி மிஸ்ரா ஆய்வு

சிதம்பரம்:சிதம்பரம் தொகுதியில் மனு தாக்கல் விவரங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை குறித்து தேர்தல் பார்வையாளர் ஷாலினி மிஸ்ரா ஆய்வு செய்தார்.
தேர்தலில் போட்டியிட கடந்த 19ம் தேதி முதல் மனு தாக்கல் துவங்கி நேற்றுடன் முடிந்தது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிட 17 வேட்பாளர்கள் உட்பட 25 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று சிதம்பரம், புவனகிரி தொகுதி தேர்தல் பார்வையாளர் ஷாலினி மிஸ்ரா சிதம்பரம் ஆர்.டிஓ., அலுவலகத்தில் மனு விவரங்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.மேலும் பதட்டமான ஓட்டுச்சாவடிகள், பணியில் ஈடுபட உள்ளவர்கள் விவரம், ஓட்டுச்சாவடி மையங்கள் அமைவிடம் குறித்து கேட்டறிந்தார்.ஆர்.டி.ஓ., இந்துமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆண்டவர் உள்ளிட்டோர் விளக்கமளித்தனர்.

No comments:

print