Friday, March 25, 2011

காங்கிரஸ்: 3 தொகுதிக்கு வேட்பாளர்கள், 3 வேட்பாளர்கள் மாற்றம்

தி.மு.க. கூட்டணியில் 63 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, இறுதி 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது மட்டுமன்றி, 3 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மாற்றியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா இன்று டெல்லியில் இதை அறிவித்துள்ளார். 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது மட்டுமின்றி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 3 தொகுதிகளின் வேட்பாளர்களையும் மாற்றியுள்ளார்.

இராமநாதபுரம் தொகுதியில் அசன் அலி, பூந்தமல்லி தொகுதியில் ஜி.வி.மதியழகன், திருப்பூர் தெற்கு தொகுதியில் கே.செந்தில் குமார் ஆகியோர் இன்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் ஆவர்.

திருத்தணி தொகுதிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் சதாசிவலிங்கம் மாற்றப்பட்டு, பல முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈ.எஸ்.எஸ்.இராமன் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி தொகுதிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஹசினா சையது பதில் புதிய வேட்பாளராக மக்பூல் கான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இராபர்ட் புரூஸ் மாற்றப்பட்டு, புதிய வேட்பாளராக ஜே.ஜி. பிரின்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க

No comments:

print