Sunday, March 27, 2011

அரியலூர் தனி மாவட்டம் தொடரும்: ஜெ., உறுதி

பெரம்பலூர்: அரியலூர் தனி மாவட்டமாக தொடர்ந்து நீடிக்கும் என பெரம்பலூரில் நடந்த பிரசாரத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். மத்திய மாவட்டங்களில் 4வது நாளாக ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். கடந்த 3 நாட்களாக திருச்சியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், இன்று கரூர், முசிறி வழியாக பெரம்பலூர் வந்தார். அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசிய அவர், அங்கு பிரதான விவசாயமான வெங்காய சாகுபடியை மேம்படுத்த, வெங்காயம் பதப்படுத்தும் தொழிற்சாலை உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அரியலூர் தனி மாவட்டமாக தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

No comments:

print