Sunday, April 3, 2011

ஆதிக்கம் :வேட்பாளர்கள் 66 பேர் மீது கிரிமினல் புகார் இதில் எந்த கட்சியும் விதிவிலக்கல்ல

சென்னை:"சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் 679 வேட்பாளர்களில், 125 பேர் வழக்குகளில் சிக்கியுள்ளனர்; 66 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன' என்று தனியார் சேவை அமைப்பான தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள், பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 2,773 பேர் போட்டியிடுகின்றனர்.தி.மு.க., - காங்கிரஸ், பா.ம.க., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ஜ., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூலம் தேர்தல் கமிஷனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் 679 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரத் தகவல்கள், ஆமதாபாத்தை தலைமை இடமாகக் கொண்டும், டில்லியிலிருந்தும் செயல்பட்டு வரும் ஜனநாயக சீர்த்திருத்த இயக்கத்தின் சார்பில் திரட்டப்பட்டுள்ளது.இந்த தகவல்கள், இந்த அமைப்பின் சார்பு நிறுவனமான தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் மூலம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. 679 வேட்பாளர்களில் 125 பேர் வழக்குகளில் சிக்கியுள்ளதும், இவர்களில் 66 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள விவரங்களும் தெரியவந்துள்ளன. வேட்பாளர்களில் பலர் கோடீஸ்வரராகவும் உள்ளனர். தி.மு.க., சார்பில் போட்டியிடும் 119 பேரில், 111 பேர் தேர்தல் கமிஷனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் 24 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் 160 வேட்பாளர்களில் 144 பேர் தேர்தல் கமிஷனுக்கு கொடுத்துள்ள பிரமாணப் பத்திரத்தில் 43 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.பா.ம.க., சார்பில் 14 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.தே.மு.தி.க.,வின் ஏழு பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் 63 பேரில், 54 பேரின் பிரமாணப் பத்திரத்தில் ஆறு பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.பா.ஜ.,சார்பில் போட்டியிடும்169 வேட்பாளர்களில், 19 பேர் மீது கிரிமினல்வழக்குகள்நிலுவையில் உள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களில், மூன்று வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது.

No comments:

print